பிரண்டையின் மருத்துவக் குணம்

 குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பிரண்டையை சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு சிவக்க வதக்கி புளி, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி வைத்து துவையலாக அரைத்து மதிய சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர செரியாமை நீங்கி பசி உண்டாகும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு கால்பகுதி உப்பு, கால்பகுதி புளியும் சேர்த்து சுண்டவைத்து இளஞ்சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாய்ப்பூச வீக்கம் வாடி குணமாகும்.

பிரண்டையை நெகிழ அரைத்து உடைந்த எலும்பை சரியாக இணைத்து அதன்மேல் கவனமாக பற்றுப்போட்டு வந்தால் உடைந்த எலும்பு ஒன்று கூடிவிடும்.

பிரண்டையைத் துண்டித்து உலர்த்திக் கொளுத்திச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்துத் தெளிவிறுத்தி காய்ச்சி எடுப்பதாகும்.

பிரண்டை உப்பு 1 குண்டுமணி அளவு எடுத்து வெண்ணெய் அல்லது நெய்யில் 1 அல்லது 2 மண்டலம் கொடுத்துவர இரப்பை, சிறுகுடல், பெருங்குடல் புண்கள், குன்மக்கட்டி, தீராத நாட்பட்ட வயிற்றுவலி, நவமூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ் இரத்தம் வருதல் தீர்ந்து குணமாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.