ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்ட கோரிக்கை வைத்துள்ளார். 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கோரியுள்ள ராகுல்காந்தி, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன. தூத்பத்ரி, தவ்சி மைதான், ராஜ்போரா, ராம்போரா உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்ட 48 சுற்றுலா இடங்களில் முக்கியமானவையாகும். மூடப்பட்டுள்ள சுற்றுலா மையங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |