டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்

டில்லி சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 29) பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அண்மையில் தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அவசர அழைப்பில் டில்லி சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது அவருக்கு தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகளை, மக்களுக்கு எல்லா வழிகளிலும் எடுத்துச் சொல்ல வேண்டும், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை இதற்காகவே திட்டமிடுங்கள் என பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை அமித்ஷா வழங்கி உள்ளார்.

அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 29) 12 மணி அளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உடன் சென்று இருந்தனர்.

பிரதமர் மோடி நயினார் நாகேந்திரன் உடன் தமிழக அரசியல் சூழல் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பா.ஜ., மாநில தலைவரான பின் முதல்முறையாக நயினார் நாகேந்திரன் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...