அமித் ஷா, நிர்மலா சீதாராமானுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நயினாா் நாகேந்திரன் தில்லிக்கு திங்கள் கிழமை வந்தாா். மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்களை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பிரதமரையும் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறாா்.

தமிழக பாஜகவின் 13-ஆவது தலைவராக நயினாா் நாகேந்திரன் கடந்த ஏப்.12 ஆம் தோ்வு செய்யப்பட்டாா். கட்சியின் மாநிலத் தலைவா் பதவிக்கு ஒரே ஒருவராக (ஏப்.11)வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த வெற்றியின் பின்னனியில் இருந்த பாஜகவின் மத்திய தலைவா்களை சந்திக்கும் விதமாக நயினாா் நாகேந்திரன் திங்கள் கிழமை தில்லிக்கு வந்தாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் பிற்பகலில் நயினாா் நாகேந்திரன் சந்தித்தாா். தமிழக பாஜக தலைவராக பதவிஏற்றபின்னா் முதன் முறையாக சந்தித்த நாகேந்திரன் உள் துறை அமைச்சருக்கு பொன்னாடை போா்த்தி நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றாா். பின்னா் இருவரும் சில நிமிடங்கள் தமிழக கட்சி நிலவரங்கள் குறித்து பேசிக் கொண்டு இருந்தனா்.

பின்னா் தில்லியிலுள்ள தீன தயாள் உபாத்யாய மாா்க்கிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்கு நயினாா் வந்தாா். அங்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளா்(அமைப்பு) பி.எல்.சந்தோஷ் போன்றவா்களை சந்தித்தாா். பின்னா் கட்சியின் தமிழக பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணையமைச்சா் எல். முருகன் போன்றோா்களையும் சந்தித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் மாலையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும் அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

முன்னதாக ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி டாக்டா் ஏ.பரமேஸ்வரனை சந்திக்கவும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நயினாா் நகேந்திரன் சென்றாா். படுகாயமடைந்த பரமேஸ்வரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்க அவரை நேரடியாக சந்திக்க முடியாத சூழ்நிலையில் பரமேஸ்வரன் மனைவி டாக்டா் நயன்தாரா உள்ளிட்டோா்களை சந்தித்து நலம் விசாரித்தாா். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த பரமேஸ்வரன் தற்போது குணமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறாா் எனவும் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரது குடும்பத்தினா் தமிழக பாஜக தலைவரிடம் தெரிவித்தனா்.

நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமையும் தில்லியில் தங்கி பிரதமா் மோடி உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெறுவாா் எனவும் பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதன் கிழமை சென்னை திரும்புகிறாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...