சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

 நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.

தினமும் 500 மி.லி.க்கும் அதிகமான நீரைப் பருக வேண்டும்.

புரோட்டீன் :
சிறுநீர் குறைவாகச் செல்கின்றவர்களுக்குப் புரோட்டீன் உணவு வகைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. தினமும் சிறுநீர் அளவு 5௦௦ முதல் 800 மிலி என்ற அளவில் இருக்கின்றபோது இவர்கள் தினமும் 0.5 கிராம் முதல் 0.75 கிராம் வரை ஒரு கிலோ உடல் எடைக்குப் புரோட்டீனைச் சேர்த்துக் கொள்ளலாம். சிறுநீர் எப்போதும் போல செல்லுமாயின் இவர்கள் எப்போதும் போல புரோட்டீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பு ;
தினமும் 40 முதல் 55 கிராம் வரை கொழுப்பு உணவைச் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இவைகளின் வெளியேற்றத்திற்குச் சிறுநீரகம் தேவைப்படாது.

கார்-போ-ஹைட்ரேட்:
கார்-போ-ஹைட்ரேட் மற்றும் வைட்டமுங்களை எப்போதும் போல எடுத்துக் கொள்ளலாம்.

கலோரி :
'கலோரி' அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை.

உப்பு :
"சோடியாத்தின்" (உப்பின் அளவை) அளவைக் குறைப்பது நல்லது. உடலில் வீக்கம், நீர் சரியாக போகாமல் இருத்தல், இரத்த அழுத்தம் போன்றவற்றில் உப்பின் அளவை, வெகுவாகக் குறைக்க வேண்டும். இதே போன்றே "பொட்டாசியத்தின்" அளவையும் குறைக்க வேண்டும். (பச்சைக் காய்கறிகள், இளநீர்)

சிறுநீரகம் செயலிழக்கும் போது தவிர்க்க வேண்டியவை:
உடல் வீக்கம், இரத்த அழுத்தம், சிறுநீர் செல்லாமை ஆகயவை இருக்குமாயின்…
உணவில் உப்பைக் (சோடியத்தை) குறைக்க வேண்டும்.
உப்பு சேர்ந்த பிஸ்கட், வெண்ணெய், அப்பள வகைகள், ஊறுகாய், இறைச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும்.

புரோட்டீன் ;
தினமும் சாப்பிடுகின்ற புரோட்டீனின் அளவு 40 கிராமாக இருக்கலாம். இதில் பாதி முதல் தரமானதாக இருக்க வேண்டும். புரோட்டீனின் கொடுக்கும் அளவு இரத்தத்தில் யூரியாவின் அளவைப் பொறுத்து அமைய வேண்டும் புரோட்டீன் கார்-போ-ஹைட்ரேட் அளவு 0.3 முதல் 0.5 கிராம் வரை ஒரு கிலோ எடைக்குத் தரலாம்.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

One response to “சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.