ஹனுமன் வழியில் தாக்குதல் – ராஜ்நாத் சிங்

ராமாயண ஹனுமன் கொள்கையின்படி, துல்லியம், முன்னெச்சரிக்கை, இரக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தியதாக நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

‘ஆப்பரேஷன் சிந்துார்’ துல்லிய தாக்குதல் குறித்து பேசிய, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து, மிகச் சரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். டில்லியில் நேற்று நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

ராமாயண இதிகாசத்தில் அசோக வனத்தை அழித்தபோது, ஹனுமன் பின்பற்றிய அதே சித்தாந்தத்தை பின்பற்றி தாக்குதல் நடத்தினோம். அதாவது, துல்லியம், முன்னெச்சரிக்கை, இரக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நம் நாட்டில் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே குறி வைத்து நாங்கள் கொன்றோம். தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை, மிகுந்த சிந்தனையுடனும் உறுதியுடனும் இந்தியா எடுத்தது.

எந்தவொரு பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற எங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறோம். ‘ஆப்பரேஷன் சிந்துார்’ வாயிலாக பயங்கரவாத முகாம்களை அழித்த நம் படையினரின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்.

நம் படைகளுக்கு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி; அவரது வழிகாட்டுதலில், நம் படையினர் இந்தியாவை பெருமைப்படுத்தியதோடு, புதிய வரலாறை படைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...