குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், இந்த நிகழ்வில் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பிகாரில் காட்டு ராஜ்ஜியத்தைக் கொண்டுவந்து மாநிலத்தை சூறையாடிவர்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்களியுங்கள். நாங்கள் அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறோம். ஆனால், அதிகாரப் பதவிகளுக்கு ஆசை கொண்டுள்ள ராஷ்டிரிய ஜன தளமும் (ஆர்ஜேடி), காங்கிரஸும் இணைந்து சொந்த குடும்பத்துக்கான வளர்ச்சியை மட்டுமே பார்க்கின்றனர். மாநிலத்துக்கான வளர்ச்சி எதுவுமில்லை.

இந்தியாவில் வறுமைக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸின் தலைவர்களின் குடும்பங்கள் பணக்காரர்களாக மாறியபோது, நாட்டில் உள்ள​​மக்கள் ஏழைகளாகவே இருந்தனர். இதில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்” என்றார்.

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி, ஆர்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தனுடன் நேருக்கு நேரான மோதலில் மீண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இலக்கு வைத்துள்ளது.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் முனைப்பில், பிரதமர் மோடி கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை பிகாருக்கு வருகை தந்திருக்கிறார்.

ஆர்ஜேடியின் கோட்டைகள் எனக் கருதப்படும் சிவான், கோபால்கஞ்ச், சாப்ரா ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி, வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

அம்பேத்கரின் உருவப்படத்தை லாலு பிரசாத் யாதவ் அவமதித்ததாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து, ஆர்ஜேடி கட்சியை குறிவைத்து பேசிய பிரதமர் மோடி, “அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களை பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...