“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

 நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இந்நிலையை 'தாழ்நிலை சர்க்கரை' என்று குறிப்பிடுவர்.

பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60க்கும் குறைவாக (Blood Sugar Level <60) வரும்போது, ஒருவருக்குத் தாழ்நிலைச் சர்க்கரை உள்ளதாகச் சொல்லலாம்.

தாழ்நிலை சர்க்கரை ஏற்படக் காரணங்கள்
அவர் குறைவாக சாப்பிடுவதால்
அவர் உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரப்பதால்
அவர் நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவு அதிகமாகிவிடும்போது.
அவர் அதிக அளவில் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தாழ்நிலை சர்க்கரையை அறியும் முறைகள்
ஒருவருக்கு 'தாழ்நிலை சர்க்கரை' உள்ளதா என அறிய
தள்ளாடுதல்
இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது (மூச்சு இறைப்பது)
அதிக வியர்வை வெளிப்படுதல்
பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருத்தல்
தலைச்சுற்றல் உண்டாதல்
பசி அதிகம் ஏற்படுதல்
கண் பார்வை மங்குதல்
சோர்வும் களைப்பும் உண்டாதல்
தலைவலி உண்டாதல்
எரிச்சல், ஆத்திரம் ஏற்படுதல்
மயக்க நிலை ஏற்படுதல்
போன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருப்பதாக உணர்ந்தால், அவருக்குத் தாழ்நிலை சர்க்கரை இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வை அவர் அடைய வேண்டும்.

 

தாழ்நிலை சர்க்கரை – பக்கவிளைவுகள்
நீரிழிவுநோய் உடையவருக்கு அவ்வப்போது தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். தாழ்நிலை சர்க்கரை ஏற்படும்போது அதன் பக்க விளைவுகளாக அவர்களுக்கு,
உடல் எடை அதிகரிக்கும்
அவர்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும்.
அவர்களுக்கு இரத்தசோகை நோய் ஏற்படும்
அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரலாம்

இந்த அறிகுறிகள் இருப்பதாக அறிந்தால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உரிய சிகிச்சையை பெற வேண்டும்.

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு சிலருக்கு, இரவு நேரங்களில் தூக்கத்திலேயே தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். இந்நிலை, மயக்க நிலையை (கோமா நிலையை) ஏற்படுத்தும். அவர்கள் தூங்கும்போதே கூட இறந்துபோக நேரிடலாம்.

இந்நிலை மிகவும் அபாயகரமானது; எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக சிறு உணவு பால், ஸ்னாக்ஸ் போன்றவற்றில் சிறிது உட்கொள்ள வேண்டும். இதனால் தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

அதிகாலை எழுந்திருக்கும்போதே கூட சிலருக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். அவர்கள் உடனே நடை பயிற்சி அல்லது ஏதேனும் வேலைகளைச் செய்யக்கூடாது. ஏதேனும் சிறிது சாப்பிட்டு (அ) பால் அருந்திவிட்டுத் தம் பணிகளைத் தொடங்க வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...