வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்

பீஹாரில், ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி அவதுாறாக பேசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”வெறுப்பு அரசியலை துண்டும் ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, வலியுறுத்தி உள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை ‘இண்டி’ கூட்டணியின் அங்கமாக போட்டியிடுகின்றன.

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர், ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் பீஹார் முழுதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தர்பங்கா மாவட்டத்தில், இண்டி கூட்டணியின் வாக்காளர் உரிமை யாத்திரை சமீபத்தில் நடந்தது.

அதில் பேசிய காங்., நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார். மேடையில், ராகுல், பிரியங்கா, தேஜஸ்வி ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது: பீஹாரில், இண்டி கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் காங்கிரசார் பேசி உள்ளனர்.

இதை வன்மை யாகக் கண்டிக்கிறேன். நாட்டில் வெறுப்பு அரசியலை காங்., தலைவர் ராகுல் துவங்கி உள்ளார். இது, நம் பொது வாழ்க்கையை சீரழிக்கும். அவரது எதிர்மறை அரசியல் நாட்டை மேல்நோக்கி கொண்டு செல்லாது. இது போன்று இழிவாக பேசுவது காங்., தலைவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

சோனியா, ராகுல், மணி சங்கர் அய்யர், திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ், ரேணுகா சவுத்ரி போன்ற காங்., தலைவர்கள், பிரதமர் மோடியை பற்றி பலமுறை அவதுாறாக பேசி உள்ளனர். இதனால் அவர்களுக்கு கிடைத்தது என்ன?

இப்படி பேசினால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விடுவரா? இப்படி கீழ்த்தரமாக பேசி, பல முறை மக்களிடம் காங்., தலைவர்கள் வாங்கிக் கட்டி கொண்டனர். இருந்தும், திருந்தவில்லை. பிரதமர் மோடியை எவ்வளவு அவதுாறு செய்கின்றனரோ, அந்தளவுக்கு தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...