எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத் தாலும், பீஹாரில் ஆர்ஜேடி.,யின் காட்டாட்சியை மக்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்,” எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீஹார் சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, பாஜவினருடன் கலந்துரையாடிய மோடி கூறியதாவது: ஜனநாயகத்தின் திருவிழாவை பீஹார் கொண்டாட உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதுஅத்தியாயம் எழுதுவதற்காக நடக்கும் தேர்தல் ஆகும். இதில் பீஹார் இளைஞர்களுக்கு முக்கியபங்கு உண்டு. எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத்தாலும், பீஹாரில் நடந்தகாட்டாட்சியை 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மறக்கமாட்டார்கள்.
காட்டாட்சி நடந்ததை இளைஞர்களுக்கு முதியவர்கள் எடுத்துசொல்ல வேண்டும். இதனை பாஜவினர் உறுதிசெய்ய வேண்டும். ஸ்திரத்தன்மை இருக்கும்போது வளர்ச்சி வேகம்பெறும். இது தான் பீஹாரில் தேஜ அரசின் பலம். இதனால்தான் பீஹார் வேகம் எடுத்துள்ளது. மீண்டும் தேஜ கூட்டணி அரசு வேண்டும் என இளைஞர்கள் உற்சாகமாக சொல்கின்றனர்.
ஒரு ஓட்டில் அனைத்து சக்திகளும் அடங்கிஉள்ளன. ராமர் கோயில் கட்டுவதற்கான சூழ்நிலையை மக்கள் அளித்த ஓட்டுதான் ஏற்படுத்தியது. ஆப்பரேஷன் சிந்தூர் எடுக்கபட்டதுடன், நக்சல் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு நாடு வேகமாக வளர்ச்சிபெறுகிறது. இதுதான் ஓட்டின் வலிமை மாநிலத்தில் காட்டாட்சியை அகற்றியமக்கள், மீண்டும் எந்த சூழ்நிலையிலும் அந்த ஆட்சி மீண்டும் வருவதை விரும்பவில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |