கோவையில் நடைபெறும் தென்மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி வருவதை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
கோவை கொடிசியாவில் தென்மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நாளை புதன்கிழமை தொடங்குகிறது. 21ம் தேதிவரை 3 நாட்கள் நடைபெறும் இந்தமாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுவழங்குகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனிவிமானம் மூலம் நாளை பிற்பகல் 1.25 மணிக்கு பிரதமர் மோடி கோவை விமானநிலையம் வருகிறார். கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பில் அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம்வந்து விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் , மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடைகிறார். பின்னர் தனிவிமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுசெல்கிறார்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |