வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும்

“மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவுகட்டுவோம். ஊழல் மிகுந்த திரிணமுல் காங்., அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம். இந்தமக்கள் விரோத அரசால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் என்ற இடத்தில், பா.ஜ., பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்க கொல்கட்டாவுக்கு விமானத்தில்வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஹெர்பூருக்கு புறப்பட்டார். கடும் பனிமூட்டத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து கொல்கட்டாவுக்கே பிரதமர் மோடி மீண்டும் திரும்பினார். அங்கிருந்தபடி, தொலைபேசிமூலம் தஹெ ர்பூரில் திரண்டிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசியதாவது: ஆளும் திரிணமுல் காங்., என்னையும், பா.ஜ., வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும். அதுபற்றி கவலை இல்லை. ஆனால், மக்களை பிணையாக வைத்து, அவர்களை துன்புறுத்தி, மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்தை அக்கட்சி தடுக்ககூடாது. ஊழல், வாரிசு அரசியல், ஓட்டுவங்கி அரசியல் ஆகியவை மாநிலத்தை ஆக்கிரமித்துள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த காட்டாட்சிக்கு விரைவில் நாங்கள் முடிவுகட்டுவோம்.

மேற்கு வங்க அரசுக்கு தேவையான நிதியுதவியை அளித்துவருகிறோம். எந்த குறையும் வைக்கவில்லை. ஆனாலும், மாநிலத்தின் அனைத்து துறைகளிலும், ‘கமிஷன் கலாசாரம்’ தலைவிரித்தாடுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கபட்டுள்ளது. மேற்குவங்கத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். இது வெறும் வாக்குறுதி அல்ல; எங்களது நீண்டகால கனவு. அதைநிறைவேற்ற வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

ஊழல் இல்லாத துாய்மையான ஆட்சியை தருவோம். அதற்கு, பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணி ஆட்சிநடக்கும் மாநிலங்களே சாட்சி. பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தேஜ., கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இது, அடுத்தாண்டு மேற்குவங்கத்திலும் எதிரொலிக்கும். கங்கை நதி பீஹாரில் இருந்து மேற்குவங்கத்தில் பாய்வது போல, பீஹார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும்.

மேற்கு வங்கத்தில், ஊடுருவல்காரர்களுக்கு ஆளும் திரிணமுல் காங்., ஆதரவு அளிக்கிறது. அதனால்தான், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரதிருத்தப் பணியை அக்கட்சி எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம். இதில் சமரசத்துக்கே இடமில்லை. மேற்குவங்கத்தின் வீதிகளில் இப்போது ஒருமுழக்கம் பலமாக ஒலிக்கிறது. அது, ‘வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும்’ என்ற முழக்கம் தான். திரிணமுல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். இது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீ ...

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போரால் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில் ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் – மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் மேற்காசியாவில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபத ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருக்கிறோம்” – பிரதமர் மோடி மகிழ்ச்சி மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அ ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வல்லது பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம்” – பிரதமர் மோடி குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்- தொடக்கி வைத்த மோடி டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, ...

ஆதரவளிக்கும் பிரதமரின் விஸ்வக ...

ஆதரவளிக்கும்  பிரதமரின் விஸ்வகர்மா திட்டங்கள் உதயம் பதிவு தளம், உதயம் உதவித் தளம் ஆகியவற்றில் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...