எலும்பு நைவு (OSTEOPOROSIS)

 உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் எந்திரத்தனமான இலகு வாழ்க்கையை நோக்கி பெரும்பான்மையான முன்னேறிய நாடுகளிலுள்ள மக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். பின்தங்கிய நாடுகளிலுள்ள மக்களுக்கோ சரியான சத்துணவின்றி ஆண்டுகளைக் கடத்த வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை இரண்டுமே 'எலும்புநைவைக் (OSTEOPOROSIS) கொண்டுவரும் காரணிகளாக திகழ்கின்றன.

இன்று உலகிலுள்ள வயது முதிர்ந்தோர்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே இருக்கின்ற ஒரு பொதுவான எலும்பு நோய் இந்த 'எலும்பு நைவு' என்பது. இவர்கள் அனைவருமே முதுகுவலியால் தொடர்ந்து துன்பப்படுபவர்கள்தாம். பலருக்கு முதுகு கூன் விழுந்திருக்கும். அல்லது கால்கள் வளைந்திருக்கும் சிலர் நடக்கூட கடினப்படுவர்.

சரிவர சத்துணவு கிடைக்காத ஏழை மக்கள் – புரதக்குறைவு, உயிர்ச்சத்துக் குறைவு போன்றவற்றால் பல்லாண்டுகலாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எலும்பு வளர்ச்சியும், எலும்பு பலமும் சிறு வயது முதற்கொண்டே குறைவாக இருக்கும். உடலின் உயரமும், பருமனும் கூடக்கூட தமது உடம்பையே தூக்கிக் கொண்டு நடக்கவும் வலு இல்லாமல் இவர்களது எலும்புகள் நைந்து போகக்கூடும்.

அதிகமாக ஆடி ஓடி வேலை செய்யும் இளைஞர்களுக்கும், விளையாட்டு தடகள வீரர்களுக்கும் தசைகளும், எலும்புகளும் உறுதியடைந்து 'எலும்படர்த்தி உச்சம்' தொடும். இவர்களுக்குப் பிற்காலத்தில் எலும்பு நைவு நோயே வராமல் போகலாம். ஆனால், வயது முதிர்ந்தவர்கள் அளவுக்கதிகமான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால், அவர்களுக்கு ஏற்கனவே எலும்பு நைவு இருந்தால் அது அதிகமாகும்.

எலும்பு நைவு ஏன் ஏற்படுகிறது?

 

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' எலும்பு வளர்ச்சியிலும் உண்டு. எலும்பின் பழைய பகுதிகள் தேய்வடைந்து கரைந்து போதலும் இதற்குப் பதிலாக புதிய எலும்பு பகுதிகள் வளர்ந்து வருதலும் அன்றாடம் இயற்கையாகவே நிகழும். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே இயல்பாகவே ஒரு சமநிலை இருக்கும்.

எலும்பு நைவு நோயில் புதிய எலும்பு வளர்தல் குறைவாகவும், பழைய எலும்பு கழிதல் மிக அதிகமாகவும் நடக்கும். இதனால் சமமின்மை ஏற்படும். எலும்பின் அடர்த்தி படிப்படியாக குறைந்து எலும்புகள் உடையும். இதற்கு ஆங்கிலத்தில் 'ஆஷ்டியோபொரோசிஷ்' என்று பெயர்.
 

 

எலும்பு நைவு நோய் வரக் காரணிகள்

 
இயற்கையில் உறுதியான எலும்புகளும், பற்களும் வளர்வதற்குக் கால்சியம் சத்து தேவை. இளமைப் பருவங்களில் உடலுக்குத் தேவையான கால்சியத்தை உடலே இடைவிடாத உழைப்பினால் உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் உண்டு. ஆனாலும் கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள் உட்கொள்ளுதலும் மிகத் தேவை.

சில வேளைகளில் தேவையான கால்சியம் உணவில் இருந்தபோதும் கூட, சில இரப்பை மற்றும் குடல் சார்ந்த கோளாறுகளால் இந்தக் கால்சியம் சத்து சரிவர உணவிலிருந்து உடலுக்குள் உறிஞ்சப்படாமலே போகலாம். மலத்தில் அதிகப்படியான கால்சியம் வெளியேறலாம்.

மாதவிடாய் நின்றபிறகு, 3இல் 1 பெண்ணுக்கு இந்த எலும்பு நைவு நோய் வருவதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. அவர்களது உடலில் சுரக்கும் 'ஈஷ்ட்ரோஜன்' என்ற இயக்குநீரின்(Harmone) அளவு குறைவதே இதற்குக் காரணம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...