பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம்

பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை பார்த்ததும் பிரதமர் நரேந்திர மோடி சட்டென தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தினார். தனது தாயார் ஹீராபென் மோடியுடன் தான் இருப்பது போல வரையப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்து பிரதமர் சில கணம் சிலிர்த்துப் போனார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று (ஜன 23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினார்.

அப்போது அங்கு ஒரு சிறுமி, மோடியும் அவர் தாயார் ஹீராபென்னும் ஒன்றாக இருக்கும் படத்தை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்தார். மோடி உரையாற்ற ஆரம்பித்த 2 நிமிடங்களிலேயே சிறுமி கையில் இருந்த ஓவியத்தை கண்டு அவர் சிலிர்த்து போனார். இதையடுத்து, தனது உரையை நிறுத்திய மோடி, “நானும் எனது தாயாரும் கோயிலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஓவியமாக வரைந்து வந்துள்ள சிறுமி ஒருவர் அதை என்னிடம் கொடுப்பதற்காக நீண்ட நேரம் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து அந்த புகைப்படத்தை பெற்றுக்கொண்டு வாருங்கள். அதில் அவரது பெயர், விவரங்கள் இருந்தால் போதும். நான் மீண்டும் பதில் கடிதம் அனுப்புவேன்” என்று கூறியதோடு, சிறுமியை நோக்கி நன்றி மகளே! என்று கூறினார்.

அங்கு நின்ற சிறுமியை பிரதமர் கவனித்து அவருக்காக பேசியதை கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்டினர். உடனடியாக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுமியிடம் ஓவியத்தை வாங்கியதோடு, அவரது விவரங்களையும் பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து ஓவியத்தை வரைந்துவந்த சிறுமி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், “என் பெயர் க.ஷகஷ்ரா. நான் மதுரையில் இருந்து வந்துள்ளேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடிக்கு அவரது தாயார் ஆசிர்வாதம் வழங்குவது போல் படத்தை வரைந்து வண்ணம்தீட்டி கொண்டு வந்திருந்தேன். அந்தப் படத்தை பிரதமர் மோடி வாங்கிக்கொண்டு என்னை வாழ்த்தினார். இந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

சிறுமியின் தாயார் கவிதா திலீபன் கூறுகையில், “பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் போன்ற மிகப்பெரிய தலைவரை யாரும் பார்க்க முடியாது. இந்தியாவை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார். உலக நாடுகள் இந்தியாவை பார்த்து பயப்படுகிறது என்றால் அது மோடியின் தலைமை தான் காரணம். அவர் மீண்டும் பிரதமராக வாழ்த்தும் வகையில் எனது மகள் ஓவியம் தீட்டி இங்கு கொண்டுவந்து கொடுத்தாள்” எனத் தெரிவித்தார்.

சிறுமியின் சித்தி அருள்மணி கூறுகையில், “பிரதமர் எங்களது மகளின் ஓவியத்தை பார்த்து வாங்குவார் என எதிர்பார்க்கவே இல்லை எனவும், இது ஒரு கனவு போல இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...