தடையற்ற சேவை ஒருங்கிணைப்பை ஆப்ரேஷன் சிந்தூர் – ராஜ்நாத் சிங்

“இந்தியாவின் பல அடுக்கு கடல்சார் பாதுகாப்பு அமைப்பிற்குள் தடையற்ற சேவை ஒருங்கிணைப்பை ஆபரேஷன் சிந்தூர் வெளிப்படுத்தியதுடன், இந்திய கடலோரக் காவல்படையின் முன்னணிப் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது,” என்று 2026 பிப்ரவரி 01 அன்று புதுதில்லியில் நடந்த இந்தியக் கடலோரக் காவல்படையின் 50-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

தேசிய பாதுகாப்பின் வலுவான தூண்களில் ஒன்றாக இந்தியக் கடலோரக் காவல் படையைக் குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், இது மேம்பட்ட கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், நவீன விமானங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு பிரமாண்டமான, நவீனமான சக்திவாய்ந்த படையாக மாற்றப்பட்டுள்ளது என்றார். “நாட்டிற்கு கடலோரக் காவல் படை ஆற்றும் சேவை, இந்தியா தனது கடல்சார் நலன்களைப் பற்றி நம்பிக்கையுடன் பேசுவதற்கும், கடல்சார் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கடலோர மேம்பாட்டிற்கான திட்டங்களைத் தெளிவுடன் வகுப்பதற்கும் முக்கிய காரணம் என்று நாடு பெருமிதம் கொள்கிறது,” என அவர் கூறினார்.

தேச பாதுகாப்பு எப்போதும் அரசுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய திரு ராஜ்நாத் சிங், இந்த படைப் பிரிவின் முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு ஆதரவையும் வழங்கினார். இதனை இன்னும் திறமையானதாகவும், நவீனமாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான உறுதியை அவர் வெளிப்படுத்தினார். “கடலோரக் காவல் படை வலுவாக இருக்கும்போது மட்டுமே இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நமது கடல்சார் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கும்போது, ​​பிராந்திய மட்டத்தில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் இந்தியா சிறப்பாக செயல்பட முடியும், ”என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கடலோரக் காவல் படையின் 50 ஆண்டுகால அசைக்க முடியாத விழிப்புணர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சேவையை குறிக்கும் வகையில், பொன்விழா ஆண்டு இலச்சினையை பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார். இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இப்படையின் வளமான மரபு மற்றும் முக்கிய பங்கை கவுரவிக்கும் வகையில், 50 ஆண்டுகால நினைவு அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...