பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

 முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான புல் வெளிகளிலும் புல்லோடு புல்லாகப் படர்ந்திருக்கும். மஞ்சள் நிறம் கொண்ட பூக்களுடனும், நட்சத்திர வடிவம் கொண்ட காய்களுடனும் இது காணப்படும்.

உடல் உஷ்ணத்தைத் தனித்துக் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். களைப்பை போக்குவதுடன் உடம்பில் தேங்கும் கெட்ட நீரினை வெளியேற்றும் தன்மை இதற்கு மிகவுண்டு. நம்முடலில் சேரும் அதிகப்படியான அமிலச்சத்துகளை வெளியேற்றுவதில் நெருஞ்சி பெருந்துணை புரிகிறது.

சிறுநீரகம் சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நெருஞ்சில் செடியின் வேர், இலை அனைத்தையும் சுத்தமாக கழுவிட்டு கல்லுரலில் இட்டு நன்கு இடித்துச் சாரெடுத்துப் பருகி வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து வந்து சுத்தம் செய்து இடித்து நன்கு பிழிந்து ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி இரண்டு வேளை, மோர் அல்லது பாலுடன் கலந்து ஒரு வாரம் உட்கொண்டால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போவது குணமாகும்.

சிறுநெருஞ்சில் இலைகளை நெல்லிக்காயளவு அரைத்துக் காலை வேளையில் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், மூளையும் நரம்பு மண்டலமும் மற்றும் எல்லா ஹார்மோன்களும் தூண்டிவிடப்பட்டுச் சுரக்கச் செய்யும்.

நெருஞ்சில் நன்கு செயல் புரியும் மூலிகையாகும். நல்ல பசியைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. அமில உற்பத்தி, தானே சமனப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...