இந்தியா-பிரேசில் இடையே விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வலுவடையும்-சிவராஜ் சௌகான்

விவசாய மற்றும் அவை சார்ந்த துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என இந்தியா-பிரேசில் நாடுகள் முடிவு செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற அந்நாட்டு வேளாண் அமைச்சர் திரு கார்லோஸ் பவேரோ மற்றும் திரு லூயிஸ் பவுலோவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசில் சென்றிருந்தபோது, பரஸ்பரம் இருநாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து உயர்நிலை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை அவ்வப்போது நடத்துவது என முடிவு செய்திருந்ததை திரு சிவராஜ் சிங் சௌகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பிரேசில் நாட்டுடன், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பும், வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில், வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து திரு லூயிஸ் பவுலோ வலியுறுத்தியதை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வேளாண் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு அமைச்சர்களுக்கு திரு சிவராஜ் சிங் சௌகான் அழைப்பு விடுத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...