1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு என்ன நடந்தது?

 1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு  என்ன நடந்தது?""தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -எனும் பாரதியின் வரிகளிலே நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை நாம் அறிந்து கொள்ளலாம் . கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த, ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்று இரவு என்ன நடந்தது?

டில்லியில் பாராளுமன்றம் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள்_கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் பாடலை பாடினார்.கூட்டத்தின் தலைமை உரையை ராஜேந்திர பிரசாத் வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம்_கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றுக்கொண்டார் . கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன், ஆட்சி அதிகாரத்தினை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சிபொறுப்பை ஏற்றுக்கொண்ட நேரு, "விதியுடன் ஒரு போராட்டம்' எனும் தலைப்பில் ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

அதில், "" இன்று நாம் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை முழுமையாக அடையமுடியாவிட்டாலும் கணிசமான அளவுக்கு அடைந்து விட்டோம். உலகமே உறங்கி கொண்டிருக்கும் இந்த_நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புதுவாழ்வையும் பெறுகிறது. புதிய சகாப்தம் இன்றிலிருந்து தொடங்குகிறது . வரலாற்றில் மிகஅரிதானதருணம் இது. நீண்டகாலம் அடைபட்டு கிடந்த ஒரு நாட்டின் மறு மலர்ச்சி இன்று புத்துயிர்பெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்றசுதந்திரத்தை பேணிக்காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்லவும், மக்களின் சேவைக்காவும், மனித நேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...