குடியரசு தினம்

 இந்தியாவை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய்நாட்டிற்காக அர்பணித்த தேச தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக் கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.

 

ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறுசிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சிசெய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியாமுழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப்பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒருநாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், அத்திருநாளில் தமது தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரதமண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக் கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்துபள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசியகீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு மிக்க திருநாளான குடியரசுதினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற் காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஐரோப்பாவை சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழி பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவை கண்டறிந்தார். அதன்பிறகு, இந்தியாவின் வளமையை கண்ட ஐரோப்பியர்கள் வணிகம்செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிகமுகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்தியகம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமை யின்மையை நன்றாக பயன் படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவு படுத்தி, இந்தியாவை முழுமையாக தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்தியவளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரிய தொடங்கினார்கள்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்குநாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீபோல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இதன் விளைவாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதியபாரதம் உதயமானது.

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்து தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம்நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணயசபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்கு பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத்தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன்பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்தசாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாக கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் இந்திய அரசியல் அமைப்பு 1950 ஜனவரி 26ல் நடை முறைக்குவந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்புத் திருவிழா – பி� ...

வேலை வாய்ப்புத் திருவிழா – பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பி� ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங� ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் � ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் – எச் ராஜா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக� ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...