இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ஈடாக மற்றொரு செய்தியும் பேசு பொருளாகி வருகிறது. அது, இந்தியா முழுக்க முழுக்க சொந்தமாக தயாரித்துள்ள ‘Fast Breeder Nuclear reactor’ எனும் அணுமின் நிலையம் குறித்துதான்.
இந்தியாவின் கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் ‘Fast breeder reactor’, தற்போது ‘Criticality’ எனும் கட்டத்தை நெருங்கி விட்டதாம். இதில் criticality என்பது அணு எதிர்விணையில் தன்னிறைவை அடையும் நிலையை குறிப்பிடுகிறது.
இந்திய விஞ்ஞானிகள், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் பிரான்ஸால் கூட சாதிக்க முடியாததை சாதித்து உள்ளனர். ரஷ்யா மட்டுமே இத்தொழில்நுட்பத்தை கொண்ட ஒரே நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முதலாக, Fast breeding reactor எனப்படும், அணுமின் நிலையத்தை இந்தியா வணிக ரிதியாக செயல்படுத்தும் வகையில் வெற்றியை ஈட்டியுள்ளது, உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இனி அடுத்த கட்டமாக இந்தியா, யுரேனியத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்து, இந்தியாவில் அபரிதமாக கிடைக்கும் தொரியத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். (உலகில் நான்கில் ஒரு பங்கு தொரியம் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது)
சற்று முன் பாக்கிஸ்தான் இது சம்பந்தமாக தன் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த ரியாக்டர்கள் மூலம் தொரியத்தை (அணுகுண்டு உருவாக்க பயன்படுத்தும்) புளுடோனியமாக மாற்றி விடலாம் என்பதே காரணம். புளுடோனியத்தை வைத்து எரிசக்தியும் தயாரிக்கலாம், அணுகுண்டும் தயாரிக்கலாம்.
இதற்காக இந்திய அணுமின் கழகம், பல அரசு மற்றும் தனியார் மத்தியதர தொழில் நிறுவனங்களோடு செயல்பட்டு வந்துள்ளது. இந்த வெற்றியை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி உள்ளார்.
நல்லவன், வல்லவன் நாடாண்டால் அனைத்தும் சாத்தியமே.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |