விவேகானந்தரை பற்றி டால்ஸ்டாய்

டால்ஸ்டாய், எப்.ஒலிஹின்னி கோவ் என்பவருக்கு 8.4.1909இல் எழுதிய ஒரு கடிதத்தில், ""பண்டைய சிந்தனையாளர்கள் இன்றைய சிந்தனையாளர்களைக் கொண்டு இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்திய வேதங்களைப் படைத்த வர்கள் முதல் புத்தர், கன்பூசியஸ், லாவோ ட்யூ, மார்க்ஸ் அரேலியஸ், எபிக்ரடஸ், சாக்ரடீஸ், பிளேட்டோ, இயேசு கிறிஸ்து, ரூஸோ, பாஸ்கல், சண்ட்,

ஷோபன்ஹோவர், எமர்சன், பசட், சுவாமி விவேகானந்தர் வரையில் மற்றும் பலர்'' என்று குறிப்பிட்டார். இதில் அவர் உலகச் சிந்தனை யாளர்களில் ஒருவராக சுவாமி விவேகானந்தரையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்.

டால்ஸ்டாய், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து, 14.12.1908இல் "ஓர் இந்துவுக்கு எழுதிய கடிதம்' என்று வெளியிட்டார். அதில் அவர் சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டி ருக்கிறார்: ""இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் ஆன்மிகத் திலும் உடல் வலிமையிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் அவர்களை, முற்றிலும் அந்நியமான சிறிய ஒரு கூட்டத்தினர் ஆட்சி செய்கிறார்கள்; ஆளப்படுபவர்களைக் காட்டிலும் அளவிட முடியாத அளவில் ஆள்பவர்கள், தாழ்ந்தவர்கள். இதற்கு என்ன காரணம்? பகுத்தறிவுக்கு உட்படாத மதசித்தாந்தம் காரணமாக இருக்கலாம். இப்போது கருத்தை மிகவும் கவரும் இந்து எழுத்தாளரான சுவாமி விவேகானந்தரின் நூல்கள் இருக்கின்றன.''

டால்ஸ்டாய்க்கு 13.9.1896இல் அனேந்திரகுமார் தத்தா என்பவர், சுவாமி விவேகானந்தர் எழுதிய "ராஜயோகம்' என்ற நூலை அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட டால்ஸ்டாய், அனேந்திரகுமார் தத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், ""தங்கள் கடிதமும், தாங்கள் அனுப்பிய நூலும் கிடைத்தன. மிகவும் நன்றி. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நூல். இதைப் படித்து நல்ல பயன்  பெற்றேன். இதில் இறைவன் பற்றிய கருத்தும், மனிதனின், "நான்' என்பது பற்றிய உண்மைத் தத்துவமும் மிகவும் அருமையாக உள்ளன.'' இதே நாளில் ப.வி.வெரிஜின் என்பவருக்கும், டால்ஸ்டாய் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலும் அவர், சுவாமி விவேகானந்தரின் நூல் தன்னைக் கவர்ந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ரஷ்ய எழுத்தாளர் ஐ.எப்.நஜ்வின் என்பவர், சுவாமி விவேகானந்தரின் 1. "எனது குருநாதர்', 2. "கடவுளும் மனிதனும்', 3. "படைப்பு பற்றிய துதிப் பாடல்' போன்ற சில நூல்களை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இந்த நூல்கள் 1908ஆம் ஆண்டு டால்ஸ்டாயின் கவனத்தை ஈர்த்தன.

சுவாமி விவேகானந்தரின், "கடவுளும் மனிதனும்' என்ற கட்டுரை டால்ஸ்டாயின் கவனத்தை மிகவும் கவர்ந்தது. 9.3.1908இல் டால்ஸ்டாய் நஜ்வினுக்கு எழுதிய கடிதத்தில், ""இந்த இந்து (சுவாமி விவேகானந்தர்) எழுதிய கட்டுரை என் மனதில் பதிந்துவிட்டது; இது மிகவும் நன்றாக இருக்கிறது; அபூர்வமானது'' என்று குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த நாள் டால்ஸ்டாய் 10.3.1908 தேதியிட்ட தனது நாட்குறிப்பிலும், ""நஜ்வின் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்த "கடவுளும் மனிதனும்' என்ற அந்த இந்துவின் அற்புதமான கட்டுரையை நேற்றுப் படித்தேன். என்னுடைய எண்ணங்கள் அதில் எளிமையாக வெளியிடப்பட்டிருக்கின்றன'' என்று எழுதியிருக்கிறார்

டால்ஸ்டாயின் குடும்ப வைத்திய ராகவும், நண்பராகவும் எஸ்.ஆர்.சிட்டாலே என்பவர் இருந்தார். அவர் சுவாமி விவேகானந்தரின் இரண்டு நூல்களை டால்ஸ்டாய்க்கு அனுப்பினார். அது பற்றி டால்ஸ்டாய், 25.5.1908இல் பின்வருமாறு கூறினார்: ""கடவுள், ஆத்மா, மனிதன், சமய ஒற்றுமை ஆகியவை ஆச்சரியப்படும் வகையில், புலமையுடன் இந்த நூல்களில் பேசப்பட்டிருக்கின்றன. இவர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர்.''

டால்ஸ்டாய், 5.6.1908இல் மகோவிட்ஸ்கியிடம் பின்வருமாறு கூறினார்: ""இன்று விடியற்காலை சுமார் 5 மணியிலிருந்து விவேகானந்தரைப் பற்றியே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நேற்றுப் பகல் முழுவதும் விவேகானந்தர் நூலைப் படித்தேன். இதில் தீமையை வன்முறையால் எதிர்ப்பதை நியாயப்படுத் தும் ஓர் அத்தியாயம் இடம் பெற்றுள்ளது. இது, மிகவும் திறமையுடன் எழுதப் பட்டிருக்கிறது.'' இதில் அவர், சுவாமி விவேகானந்தரின் ஆராய்ந்து பார்க்கும் திறமையைப் பாராட்டியிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் "ஸ்ரீ கிருஷ்ணர்' பற்றி ஒரு சொற்பொழி நிகழ்த் தினார். அதை டால்ஸ்டாய் 27.7.1908இல் படித்தார். அதைப் பற்றி டால்ஸ்டாய், வி.ஜி. செர்ட்கோவ்விடம் பின்வருமாறு கூறினார்: ""சில சமயங்களில், "தீமையை நன்மை யால் வெல்ல வேண்டும்' என்றும், மற்ற சமயங்களில் "தீமை செய்பவனைக் கொல்ல வேண்டும்' என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். பிறகு, கொலையுண்டவனை உயிர் பெறச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். இங்கு தண்டனையைக் குறைப்பது என்பது, தீமை செய்தவனுக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற நல்ல வழியை நாடுவதற்குச் சமமாகும்.''

டால்ஸ்டாய், இந்துமதத்தில் இடம் பெற்றிருக்கும் "ஆத்ம விசாரணை' என்ற கருத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அதனால் அவர், சுவாமி விவேகானந்தர் கருத்தைப் புரிந்துகொண்டதற்கு அடையாள மாக, தனது 26.6.1908 நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: ""சுவாமி விவேகானந்தர் கூறியபடி "நான்' என்பது, "நீ' என்பதற்கு முழுவதும் வழிவிடுவதை உணர்கிறேன். சுயநல மின்மை என்பது வேறு எதற்காகவும் அல்ல; தெளிந்த அறிவைப் பெறு வதற்காகவே என்பதையும் உணர்கிறேன்.''

டால்ஸ்டாயிக்கு 16.2.1909இல் சுவாமி விவேகானந்தரின் சொற் பொழிவுகள், எழுத்துக்கள் அடங்கிய மூன்றாம் தொகுதி கிடைத்தது. இதுதான் அவருக்குக் கிடைத்த சுவாமி விவேகானந் தரின் கடைசி நூல் என்று கருதப்படுகிறது. டால்ஸ்டாய், "விவேகானந்தர் நூல்களை, தான் மட்டும் படித்தால் போதாது ரஷ்ய மக்களும் படித்துப் பயனடைய வேண் டும்' என்று பெரிதும் விரும்பினார். இதன் பொருட்டு அவர், தன்னுடைய நூல்களை வெளியிடும் பதிப்பாளரிடம் 7.5.1909இல், ""நீங்கள் இப்போது இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த சிந்தனையாளரான, விவேகானந்தர் நூல்களை வெளியிட முன்வர வேண்டும்'' என்று கூறினார்.

டால்ஸ்டாய், அன்னிபெசன்ட் எழுதிய ஒரு நூலை 1910இல் படித்தார். அது பற்றிய அவரது கருத்து இது: ""அன்னிபெசன்ட் பலவீனங்களையும் தவறுகளையும் சார்ந்து நிற்கிறார். ஆனால் சுவாமி விவேகானந்தர் உண்மை எதுவோ, அதைச் சார்ந்து நிற்கிறார்.''

""மதமும் விஞ்ஞானமும்'' என்ற தலைப்பில் டால்ஸ்டாய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர், ""உலகத்தில் தோன்றிய மற்ற மகான்களுடன், விவேகானந்தரின் பாரம்பரியத்தையும் மனிதகுலம் தன்னு டையதாக்கிக் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிடுகிறார். ரோமெய்ன் ரோலண்ட் கூறுகிறார்: பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அறிஞர் ரோமெய்ன் ரோலண்ட். அவர், புகழ்பெற்ற இந்திய இசைமேதை திலீப்குமார் ராயிடம் பேசும்போது, ""நான் சொன்னால், தீலீப் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். டால்ஸ்டாய் தனது இறுதிக் காலத்தில் விவேகானந்தரிடம் மனம் பறிகொடுத்திருந்தார்'' என்று கூறினார். டால்ஸ்டாய், சுவாமி விவேகானந்த ரின் சூஎணிஞீ ச்ணஞீ குணிதடூ ' என்ற கட்டுரையைப் படித்தார். அதைப் பற்றி அவர் 4.7.1908 தேதியிட்ட தனது நாட்குறிப்பில், ""இறைவனைப் பற்றி விவேகானந்தர் எழுதிய அற்புதமானக் கட்டுரையைப் படித்தேன். இதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். இதை நான் செய்ய நினைக்கிறேன்'' என்று எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...