பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார்

ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் காரணம் பாகிஸ்தான் என்பது அம்பலமானது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கடந்த 1965ல் தோற்றுவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை, உலகின் அதிக எண்ணிக்கையிலான எல்லை பாதுகாப்புப்படை என்ற பெருமையை பெற்றுள்ளது.

தாக்குதல்

அந்த அமைப்பை தோற்றுவித்து, முதல் தலைமை இயக்குநராக இருந்தவர், கே.எப்.ரஷ்டம்ஜி.

அவர் நினைவாக, டில்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அந்நாட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை தகர்த்தோம்.

அதற்கு, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என பெயரிடப்பட்டது. அந்த தாக்குதலுக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் காரணம், பாகிஸ்தான் என்பது சர்வதேச அளவில் அம்பலமானது.

ஏனெனில், நாம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஒன்பது இருப்பிடங்களைத் தான் தாக்கினோம். பாகிஸ்தான் ராணுவத்தையோ, விமானப்படையையோ அல்லது குடிமக்களையோ தாக்கவில்லை.

ஆனால், பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக நம் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை நம் வீரர்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்தன.

முக்கிய பங்கு

நம் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களும், தீரத்துடன் போராடி, ஒரு பயங்கரவாதியை கூட நம் நாட்டிற்குள் ஊடுருவ விடவில்லை.

நம் நாட்டை பாதுகாப்பதில், எல்லை பாதுகாப்புப்படை முக்கிய பங்காற்றுகிறது.

தேச பக்தியுடன், தீரமாக செயல்படும் இந்த அமைப்பு உலகின் தலைசிறந்த துணை ராணுவமாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...