பாகிஸ்தானுக்கு பெருந்தன்மைக்கான தகுதி இல்லை

பாகிஸ்தானுக்கு  பெருந்தன்மைக்கான தகுதி இல்லை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது இந்தியாவின் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கவலைக்குரியதாகும் மரண தண்டனைக்கு உள்ளான நபர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில்

தலையிடுவதோடு மட்டுமின்றி, பாகிஸ்தானின் கூட்டு அவையில் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றே வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தானின் அரசு, ராணுவம், அவர்களது உளவுத்துறையான ஐஎஸ்ஐ, குடிமக்கள் பரிபாலனம் ஆகியவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது நமது வியப்பாக இருந்துவந்தது ஆனால் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், இந்த வேறுபாடுகள் அனைத்தும் குலைந்துவிட்டன. இந்தியாவில் நடந்த மோசமான தாக்குதல்களில் ஒன்றுக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அங்கீகார முத்திரை அளித்துவிட்டது.

இதுவரை இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் எல்லைக்கு அப்பால் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியங்கள் இருக்கின்றன என்று நாங்கள் குற்றம்சாட்டி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், அது உறுதிப்பட்டுள்ளது. நமது நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சி மூலம், தண்டனை கொடுக்கப்பட்ட நபருக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து தீர்மானம் இயற்றியுள்ளது. நமது படைவீரர்களின் தலைகளை வெட்டியதும், ஐதராபாத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, சிஆர்பிஎப் வீரர்களைத் தாக்கியது போன்ற சம்பவங்களின் நிறைவுரையாகத்தான் பாகிஸ்தானின் தீர்மானம் இருக்கிறது.

தீவிரவாதிகளின் விஷயத்தில் பாகிஸ்தானின் உளப்போக்கு என்ன என்பது நன்றாக தெளிவாகிவிட்டது. இச்சூழ்நிலையில் பாகிஸ்தானை எப்படி நடத்துவது என்பதை மத்திய அரசுதான் திட்டமிட வேண்டும். மரியாதைக்குரிய பிரதம மந்திரி, பாகிஸ்தானுடன் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கத் தயாராக இருப்பதாக முன்பு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும்
ஆனால் இந்தியாவை பாகிஸ்தான் தொடர்ந்து கோபமூட்டிவருகிறது. இந்நிலையில் பிரதமர் அந்தப் பெருந்தன்மையை மறக்கவே வேண்டும். பாகிஸ்தானுக்கு அந்தப் பெருந்தன்மைக்கான தகுதி இல்லை. பாகிஸ்தானின் தீர்மானத்தைப் பொருத்தவரை, இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வரை முறையான பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் கூடுதல் பெருந்தன்மையை எதிர்பார்ப்பதை விட பாகிஸ்தான் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும். இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் உண்மையிலேயே சீர்ப்பட வேண்டும் என்று விரும்பினால் இதுபோன்ற தீர்மானங்களின் மூலம் அது சாத்தியப்படாது. மாலே, ரோம் அல்லது இஸ்லாமாபாத் என்று எந்த நாடாக இருந்தாலும் சரி, நாம் இப்போது இருக்கும் தீவிரமான நிலையை சந்தித்துவரும் சூழலில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.

நமது வெளியுறவுக் கொள்கையை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். அத்துடன் அக்கொள்கைகள் நம்மை எந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது  என்பதையும் நாம் கருதவேண்டும். சர்வதேச ரீதியில் தொடர்ந்து இதேபோல இந்தியா பல்வேறு நாடுகளால் ஏமாற்றப்பட்டால், நமது வெளியுறவு கொள்கையில் ஏதோ தவறு இருக்கிறது என்பதே அர்த்தம். அதனால் மாண்புமிகு பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு தேதியை நிர்ணயித்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் .

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...