தற்காலத்தில் ஒருவன் மோசஸ் , இயேசு கிறிஸ்து , புத்தர் ஆகியவர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டாக சொன்னால் , அவன் ஏளனத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஒரு ஹக்ஸ்லி, டின்டால், டார்வின் ஆகிய இவர்களின் பெயர்களை அவன் சொல்லட்டும். அவர்களுடைய
கருத்து என்னவாக இருந்தாலும் மக்கள் அதை அப்படியே கேள்விக்கிடமின்றி நம்பிவிடுவார்கள்.
'ஹக்ஸ்லி இப்படி சொல்லிருக்கிறார்' என்று குறிப்பிட்டால் அதுவே பலருக்கு போதுமானதாக இருக்கிறது. நாம் மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள்தாம் என்றாலும் , முன்பு கூறியது மத வாழ்க்கை சேர்ந்த மூட நம்பிக்கையாக இருந்தது. பின்னால் குறிப்பிட்ட இது , விஞ்ஞான ரீதியான மூட நம்பிக்கையாக இருக்கிறது. மதத்தை சேர்ந்த மூட நம்பிக்கைகளின் மூலமாகத் தான் உயிரோட்டம் தரக்கூடிய ஆன்மிக கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. விஞ்ஞான ரீதியான இன்றைய மூட நம்பிக்கையின் மூலமாகவே காமமும் , பேராசையும் விளைந்திருகின்றன. முதலில் கூரிய மூட நம்பிக்கை கடவுள் வழிபாடாக இருந்தது. பின்னால் கூரிய இதுவோ அருவருக்கத் தக்க செல்வம், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் வழிபாடாக இருக்கிறது. இது தான் இந்த இரண்டு மூட நம்பிகைகளுக்கும் உள்ள வேறுபாடு.
சுவாமி விவேகானந்தர்
You must be logged in to post a comment.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
3granddaughter