பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளார் ஸ்வாதி மலிவால்

பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு (ஆம்ஆத்மி) கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளதாக ராஜ்சபா எம்.பி., ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். அதேபோல, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டசபை வெற்றியை பா.ஜ.,வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்ட ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மலிவால், ஆம்ஆத்மி தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்பு திரவுபதி படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ நாம் வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். அதுதான் தற்போதைய தேர்தலில் நடந்துள்ளது. பொய் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் தான் ஆம்ஆத்மிக்கு இருக்கிறது.

குடிநீர், காற்று மாசுபாடு, மோசமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவை தான் ஆம்ஆத்மியின் தோல்விக்கு காரணமாகும். தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு வாழ்த்துக்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்,’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...