பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளார் ஸ்வாதி மலிவால்

பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு (ஆம்ஆத்மி) கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளதாக ராஜ்சபா எம்.பி., ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். அதேபோல, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி சட்டசபை வெற்றியை பா.ஜ.,வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்ட ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மலிவால், ஆம்ஆத்மி தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்பு திரவுபதி படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ நாம் வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். அதுதான் தற்போதைய தேர்தலில் நடந்துள்ளது. பொய் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் தான் ஆம்ஆத்மிக்கு இருக்கிறது.

குடிநீர், காற்று மாசுபாடு, மோசமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவை தான் ஆம்ஆத்மியின் தோல்விக்கு காரணமாகும். தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு வாழ்த்துக்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்,’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...