இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஏகே.அந்தோணி விளக்கம் தர வேண்டும்

 இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் ஊடுருவி இந்தியராணுவத்துடன் கடந்த 11 நாட்களாக துப்பாக்கிசண்டை நடத்திவருவது குறித்து ராணுவ அமைச்சர் ஏகே.அந்தோணி விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது.

காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் மக்கள்நடமாட்டம் இல்லாத சலாபட் கிராமத்தில், 11 நாட்களுக்குமுன்பு 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் ஊடுருவினர். அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தைசேர்ந்த சிறப்பு அதிரடிபடை வீரர்களும் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல்கிடைத்தது.

இதைதொடர்ந்து சலாபட் கிராமத்தை இந்திய ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதலை தொடங்கியது. இன்றுவரை தொடர்ந்து 11 நாட்களாக இங்கு துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியதரப்பில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. நேற்று இரவு வரை 15 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலைவரை நீடித்த துப்பாக்கிசண்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புடன் கடந்த 29ம் தேதி அமெரிக்காவில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு மறுபுறம் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இருக்கும் பாகிஸ்தான் செயலுக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடுருவல் தொடர்பாக ராணுவஅமைச்சர் ஏ.கே.அந்தோணி நாட்டுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், தீவிரவாத தாக்குதல்களும், ஊடுருவல்களும் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவறு. எல்லையில் எல்லாவகையிலும் இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் சீண்டிவருகிறது. கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்ததாண்டு ஊடுருவல்களும், இந்திய நிலைகள்மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாட்டுமக்களுக்கு ராணுவ அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...