இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஏகே.அந்தோணி விளக்கம் தர வேண்டும்

 இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் ஊடுருவி இந்தியராணுவத்துடன் கடந்த 11 நாட்களாக துப்பாக்கிசண்டை நடத்திவருவது குறித்து ராணுவ அமைச்சர் ஏகே.அந்தோணி விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது.

காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் மக்கள்நடமாட்டம் இல்லாத சலாபட் கிராமத்தில், 11 நாட்களுக்குமுன்பு 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் ஊடுருவினர். அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தைசேர்ந்த சிறப்பு அதிரடிபடை வீரர்களும் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல்கிடைத்தது.

இதைதொடர்ந்து சலாபட் கிராமத்தை இந்திய ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதலை தொடங்கியது. இன்றுவரை தொடர்ந்து 11 நாட்களாக இங்கு துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியதரப்பில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. நேற்று இரவு வரை 15 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலைவரை நீடித்த துப்பாக்கிசண்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புடன் கடந்த 29ம் தேதி அமெரிக்காவில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு மறுபுறம் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இருக்கும் பாகிஸ்தான் செயலுக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடுருவல் தொடர்பாக ராணுவஅமைச்சர் ஏ.கே.அந்தோணி நாட்டுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், தீவிரவாத தாக்குதல்களும், ஊடுருவல்களும் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவறு. எல்லையில் எல்லாவகையிலும் இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் சீண்டிவருகிறது. கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்ததாண்டு ஊடுருவல்களும், இந்திய நிலைகள்மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாட்டுமக்களுக்கு ராணுவ அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...