இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஏகே.அந்தோணி விளக்கம் தர வேண்டும்

 இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் ஊடுருவி இந்தியராணுவத்துடன் கடந்த 11 நாட்களாக துப்பாக்கிசண்டை நடத்திவருவது குறித்து ராணுவ அமைச்சர் ஏகே.அந்தோணி விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது.

காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் மக்கள்நடமாட்டம் இல்லாத சலாபட் கிராமத்தில், 11 நாட்களுக்குமுன்பு 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் ஊடுருவினர். அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தைசேர்ந்த சிறப்பு அதிரடிபடை வீரர்களும் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல்கிடைத்தது.

இதைதொடர்ந்து சலாபட் கிராமத்தை இந்திய ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதலை தொடங்கியது. இன்றுவரை தொடர்ந்து 11 நாட்களாக இங்கு துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியதரப்பில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. நேற்று இரவு வரை 15 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலைவரை நீடித்த துப்பாக்கிசண்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புடன் கடந்த 29ம் தேதி அமெரிக்காவில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு மறுபுறம் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இருக்கும் பாகிஸ்தான் செயலுக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடுருவல் தொடர்பாக ராணுவஅமைச்சர் ஏ.கே.அந்தோணி நாட்டுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், தீவிரவாத தாக்குதல்களும், ஊடுருவல்களும் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவறு. எல்லையில் எல்லாவகையிலும் இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் சீண்டிவருகிறது. கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்ததாண்டு ஊடுருவல்களும், இந்திய நிலைகள்மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாட்டுமக்களுக்கு ராணுவ அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...