கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தழுத்தம் சரியாகும்.
சீரகம் 100 கிராம், ஓமம் 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆக மூன்று பொருள்களையும் சீர் செய்து சுத்தப்படுத்திய பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி முதலில் எலுமிச்சம் பழம் 50ன் சாறு எடுத்து, அந்தப் பாத்திரத்தில் ஊற்றி மெல்லிய துணியால் வாயை மூடி, வெயிலில் நீர்ச்சுண்டும் காலம் வரை காயவிட்டுக் காய்ந்தவுடன், இஞ்சி அரை கிலோ வாங்கிச் சாறு எடுத்து அதேப் பாத்திரத்தில் போட்டு முன்போல் வாயை மூடி வெயிலில் காயவிட்டு, பின்னர் தூதுவளைச் சாறு பின்னர், பொற்றலைக் கரிப்பான் சாறும், பிரண்டைச் சாறும், முசுமுசுக்கை இலைச்சாறும் முறையே விட்டு நன்கு காயவிட்டு சுத்தமான உரலில் இடித்து துணியூட்டு(வஷ்த்ரகாயம்) செய்து கொண்டு காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு மண்டலம் உண்டு வர வேண்டும்.
இஞ்சிச்சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.