காங்கிரஸ்க்கு 60 வருடங்களை தந்து விட்டீர் எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.

 உ.பி.,யில் ஜான்சியில் நடைபெற்ற பாஜக. பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடி பேசியதாவது:-

ஜான்ஸி ராணி பிறந்தமண்ணில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கவே நான் இங்குவந்துள்ளேன். பிறரைபோல கண்ணீர் வடித்துபேச மாட்டேன். இந்த பகுதியில் நீர் ஆதாரம் இருந்தும் விவசாயிகள் முன்னேற முடிய வில்லை. காரணம் டில்லியில் உள்ளவர்கள் விவசாயிகள்குறித்து கவலை அடையவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது, இதற்கானகாரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும். மத்திய அரசு ஒதுக்கியநிதி ஏழை மக்களை சென்றடையவில்லை. இது அவர்களின் பாக்கெட்டுக்கு சென்றது. இந்தநிதி எங்கே போனது? காங்கிரஸ், சமாஜ்வாடி, , பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் இது

பாராளுமன்றதேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்னசெய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ்கட்சி மறுத்து வருகிறது. பண வீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம்சாதிக்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருஅரசு மக்களுக்கு பதில் அளிக்கவேண்டாமா? ஆனால், தங்களை இந்நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக்கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ்கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களைதாருங்கள்.

ஒருகாலத்தில் ரெயில்களில் டீவிற்ற என்னை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்கவேண்டாம். இந்நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால்போதும். உங்கள் காவல் காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும்கைவைக்க முடியாதபடி நான் காவல்காப்பேன் .

1984 ல் கலவரத்தினால் பாதிக்கப் பட்டவர்களை ராகுல் காயப்படுத்துகிறார்.முஷாபர் பூரில் கலவரம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யைத் தொடர்புகொண்டதாக நமது உளவுத்துறை தகவல் கொடுத்தது என்று ராகுல்கூறுகிறார். ரகசிய காப்பு பிரமாணம் எடுக்காதராகுலுக்கு, முஷாபர்நகர் கலவரம் குறித்து உளவுதுறை எப்படி தகவல் வழங்கியது ?  திட்டக் கமிஷன் ஒரு நாளைக்கு ரூ. 32 வருமானம்போதும் என்கிறது. காங்கிரஸ் காரர்களால் இதுபோன்று வாழ முடியுமா ?  என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...