காங்கிரஸ்க்கு 60 வருடங்களை தந்து விட்டீர் எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.

 உ.பி.,யில் ஜான்சியில் நடைபெற்ற பாஜக. பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடி பேசியதாவது:-

ஜான்ஸி ராணி பிறந்தமண்ணில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கவே நான் இங்குவந்துள்ளேன். பிறரைபோல கண்ணீர் வடித்துபேச மாட்டேன். இந்த பகுதியில் நீர் ஆதாரம் இருந்தும் விவசாயிகள் முன்னேற முடிய வில்லை. காரணம் டில்லியில் உள்ளவர்கள் விவசாயிகள்குறித்து கவலை அடையவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது, இதற்கானகாரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும். மத்திய அரசு ஒதுக்கியநிதி ஏழை மக்களை சென்றடையவில்லை. இது அவர்களின் பாக்கெட்டுக்கு சென்றது. இந்தநிதி எங்கே போனது? காங்கிரஸ், சமாஜ்வாடி, , பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் இது

பாராளுமன்றதேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்னசெய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ்கட்சி மறுத்து வருகிறது. பண வீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம்சாதிக்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருஅரசு மக்களுக்கு பதில் அளிக்கவேண்டாமா? ஆனால், தங்களை இந்நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக்கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ்கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களைதாருங்கள்.

ஒருகாலத்தில் ரெயில்களில் டீவிற்ற என்னை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்கவேண்டாம். இந்நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால்போதும். உங்கள் காவல் காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும்கைவைக்க முடியாதபடி நான் காவல்காப்பேன் .

1984 ல் கலவரத்தினால் பாதிக்கப் பட்டவர்களை ராகுல் காயப்படுத்துகிறார்.முஷாபர் பூரில் கலவரம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யைத் தொடர்புகொண்டதாக நமது உளவுத்துறை தகவல் கொடுத்தது என்று ராகுல்கூறுகிறார். ரகசிய காப்பு பிரமாணம் எடுக்காதராகுலுக்கு, முஷாபர்நகர் கலவரம் குறித்து உளவுதுறை எப்படி தகவல் வழங்கியது ?  திட்டக் கமிஷன் ஒரு நாளைக்கு ரூ. 32 வருமானம்போதும் என்கிறது. காங்கிரஸ் காரர்களால் இதுபோன்று வாழ முடியுமா ?  என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...