நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

 நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய வழிகள் நான்கு அவை,

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுதல்
சரியான உணவுமுறைப் பழக்க வழக்கத்தை கடைபிடித்தல்
தேவையான உடற்பயிற்சிகளைத் தொடார்ந்து செய்தல்.
நோயுடையவர் உரிய மருத்துவம் பெறுதல்.

விழிப்புணர்வு
பொதுமக்கள் அனைவருக்கும் நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீரிழிவு குறித்த விழிப்புணர்வு என்றால், நீரிழிவுநோய் குறித்த அடிப்படைச் செய்திகளை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதே ஆகும்.

இந்நூல், நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வையும், நீரிழிவு நோயுள்ளவர்கள் பாதிப்புகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், விரிவாக விளக்கிக் கூறுகிறது.

முதல் செய்தி
நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வில் முதல் செய்தி, இந்நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதே.

உடல் இயக்கம்
நம் உடலுக்கு நாள் தோறும் அனைத்துப் பணிகளையும் செய்யச் சக்தி தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவுப்பொருட்கள்தான் நமக்கு வேலைகளைச் செய்வதற்குரிய சக்தியைக் கொடுக்கின்றன. இந்த உணவுப்பொருட்கள் முதலில் நம் உடலில் சர்க்கரையாக (குளுகோஸ்) மாற்றப்படுகின்றன. அப்படிச் சர்க்கரையாக மாற்றப்பட்டவை,உடலின் பல்வேறு பாகங்களில் உள்ள செல்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இன்சுலின்
சர்க்கரையாக மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள்,சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள செல்களுக்கும் செல்ல 'இன்சுலின்' என்னும் திரவம் நுழைவாயிலாகச் செயல்படுகிறது.

இன்சுலின் என்பது, நமது உடலிலுள்ள 'கணையம்' என்ற உறுப்பில் இருந்து சுரக்கும் ஒரு திரவம் (ஹார்மோன்) ஆகும். சர்க்கரை சக்தியாக மாற இன்சுலின் அவசியம் தேவைப்படுகிறது.

நீரிழிவு நோய்
உடலிலுள்ள செல்கள் எனப்படும் மிக நுண்ணிய பாகங்கள், நம் உடல் இயக்கத்திற்கும் துணை புரிகின்றன. இச்செல்களுக்குள் குளுகோஸ் சக்தியாக மாறி சென்று சேர வேண்டும்.

இன்சுலின் போதுமான அளவில் கணையத்திலிருந்து சுரக்காவிட்டாலோ, சுரந்த இன்சுலின் செயலிழந்து இருந்தாலோ சர்க்கரை இரத்தத்தில் அப்படியே நின்று விடுகிறது.

இப்படி இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை சேருவதையே, நீரிழிவுநோய் அதாவது சர்க்கரை நோய் என்று குறிப்பிடுகிறோம்.

 

ஒருவரது உடலில்

இன்சுலின் சுரக்கவே இல்லை என்றாலும் (No Secretion)
இன்சுலின் சுரந்தாலும் – அது போதுமான அளவு இல்லை-(பற்றாக்குறை) என்றாலும் (In Adequate)
இன்சுலின் சுரந்தாலும் – அது சரியாக வேலை செய்யாமல் பயனற்றுப் போனாலும் (In Active)

அவருக்கு ஏற்படுகிற பாதிப்பைதான் நீரிழிவுநோய் என்கிறோம்.

இயற்கையின் விந்தை
இன்சுலின் இன்மை,இன்சுலின் பற்றாக்குறை, இன்சுலினின் செயலற்றத்தன்மை ஆகிய மூன்று காரணங்களில் ஏதோ ஒன்று, ஒருவருக்கு ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது எதுவும் அறியப்படவில்லை. அது இயற்கையாக நடக்கிற ஒன்றாகவே அமைகிறது.
இயற்கையின் விந்தை

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...