பாஜக., வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் தீவிரம்

 சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று நடைபெறும் பாஜக மாநாட்டில் பாஜக  பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனிவிமானத்தில் சென்னை வருகிறார். மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

சென்னையை அடுத்த வண்டலூர் வி.ஜி.பி மைதானத்தில், நாளை மாலை பாஜக மாநாடு நடக்கிறது. இதில், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, ஐஜேகே கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் தயாராகிவருகின்றன.

தலைவர்கள் அமரும் வகையில் 200 அடி அகலத்தில் நாடாளுமன்ற கட்டிடவடிவில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியபிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர தனித் தனி வரிசைகள் அமைக்கப்படுகிறது. அதேபோல், நரேந்திரமோடி மற்றும் முக்கிய தலைவர்கள் வருவதற்கு தனிவழியும், நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதற்காக தனிவழியும் அமைக்கப்படுகின்றன. மாநாட்டில் மொத்தம் 10 லட்சம்பேரை திரட்ட நிர்வாகிகள் ஏற்பாடுசெய்து வருகின்றனர். 40 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்றார்போல் பார்க்கிங் இட வசதி ஏற்படுத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அசாம்மாநிலம் கவுகாத்தியில் இருந்து 8ம் தேதி பிற்பகலில் தனிவிமானம் மூலம் நரேந்திரமோடி புறப்படுகிறார். மாலை 6 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு அவர் வந்து சேருவார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், மாலை 6.20 மணிக்கு கார்மூலம், பாஜ மாநாடு நடக்கும் வண்டலூர் புறப்பட்டு செல்கிறார். 6.45 மணிக்கு மாநாடு மேடைக்குவருகிறார்.நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை பழையவிமான நிலையம் தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்குள்ள 5வது கேட்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடிபயணம் செய்யும் விமானம், அவை நிறுத்தப்படும் இடம் ஆகிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...