பாஜக., வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் தீவிரம்

 சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று நடைபெறும் பாஜக மாநாட்டில் பாஜக  பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனிவிமானத்தில் சென்னை வருகிறார். மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

சென்னையை அடுத்த வண்டலூர் வி.ஜி.பி மைதானத்தில், நாளை மாலை பாஜக மாநாடு நடக்கிறது. இதில், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, ஐஜேகே கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் தயாராகிவருகின்றன.

தலைவர்கள் அமரும் வகையில் 200 அடி அகலத்தில் நாடாளுமன்ற கட்டிடவடிவில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியபிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர தனித் தனி வரிசைகள் அமைக்கப்படுகிறது. அதேபோல், நரேந்திரமோடி மற்றும் முக்கிய தலைவர்கள் வருவதற்கு தனிவழியும், நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதற்காக தனிவழியும் அமைக்கப்படுகின்றன. மாநாட்டில் மொத்தம் 10 லட்சம்பேரை திரட்ட நிர்வாகிகள் ஏற்பாடுசெய்து வருகின்றனர். 40 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்றார்போல் பார்க்கிங் இட வசதி ஏற்படுத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அசாம்மாநிலம் கவுகாத்தியில் இருந்து 8ம் தேதி பிற்பகலில் தனிவிமானம் மூலம் நரேந்திரமோடி புறப்படுகிறார். மாலை 6 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு அவர் வந்து சேருவார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், மாலை 6.20 மணிக்கு கார்மூலம், பாஜ மாநாடு நடக்கும் வண்டலூர் புறப்பட்டு செல்கிறார். 6.45 மணிக்கு மாநாடு மேடைக்குவருகிறார்.நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை பழையவிமான நிலையம் தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்குள்ள 5வது கேட்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடிபயணம் செய்யும் விமானம், அவை நிறுத்தப்படும் இடம் ஆகிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...