ஜார்க்கண்ட்டில் , சிபு சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோச்சா)-தலைமையிலான கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் வாங்கியதால் , சிபு சோரன் மெஜாரிட்டியை இழந்தார். இதை தொடர்ந்து பா.ஜ.க மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது .
இதை அடுத்து ஜாம்ஜெட்பூர் தொகுதி எம்.பி அர்ஜுன் முண்டா முதல்வராக பதவியேற்று . கொண்டார் , முதல்வர் பதவியேற்று ஆறு
மாதகாலத்துக்குள் எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பதால் கர்சவான் தொகுதி எம்.எல்.ஏ.வான மங்கல்-சிங் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து , வரும் 10ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடைதேர்தல் நடக்க இருக்கிறது . தேர்தலில் அர்ஜுன் முண்டா போட்டியிடுகிறார். அவரை-எதிர்த்து, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை சேர்ந்த தசரத் காக்ராய் போட்டியிடுகிறார் . இவருக்கு காங்கிரஸ் , ராஷ்டிரிய ஜனதாதள கட்சிகள் ஆதரவு தந்துள்ளன . அனைத்து எதிர்க்கட்சிகலும் ஓரணியில் வேட்பாளரை நிறுத்தியிருப்பதால், மிக கடுமையான போட்டியை அர்ஜுன் முண்டா எதிர்கொண்டுள்ளார்
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.