நரேந்திர மோடி அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து ள்ளது

 நரேந்திர மோடி அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து ள்ளது ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் .

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இந்நிலையில் இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல் படும் அரசு என்பதை மக்கள் இப்போது உறுதியாக நம்புகிறார்கள். இது வெளிப் படையாக தெரியும்பலன். பிரதமர் நரேந்திர மோடி மந்திரிகளுக்கு மிகவும் சுதந்திரம் வழங்கியிருக்கிறார். எங்களுக்கு அவர் கூறியுள்ள ஒரேமந்திரம், 'நீங்கள் முடிவுகள் எடுப்பதை பெருமையாக கருதவேண்டும். அனைவரும் சொல்வதை கவனியுங்கள், ஆனால் நாட்டுக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுங்கள்' என்பதுதான்.

மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்து ள்ளார்கள், 100 நாட்களுக்காக அல்ல. ஆனால் கடந்த அரசின் 'கொள்கை முடக்கு வாதம்' முடிவுக்குவந்து, இப்போது முடிவுகள் அனைத்து அமைச்சகங்களிலும் எடுக்கப்படுகிறது. பெட்ரோல்விலை 2 முறை குறைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள்வைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசுமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சிபாதைக்கு திரும்பியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் நிலுவையில் இருந்த 17 திட்டங்களுக்கு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கங்கையை மாசு படுத்தும் தொழிற் சாலைகளை ஆன்லைன் மூலம் கண் காணிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கறைப்படுத்த காங்கிரஸ் சதிசெய்கிறது. ஆனால் அவர்களால் மோடி அரசு மீது ஒரு விரலைகூட சுட்டிக்காட்ட முடியாது. என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...