நரேந்திர மோடி அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து ள்ளது

 நரேந்திர மோடி அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து ள்ளது ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் .

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இந்நிலையில் இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல் படும் அரசு என்பதை மக்கள் இப்போது உறுதியாக நம்புகிறார்கள். இது வெளிப் படையாக தெரியும்பலன். பிரதமர் நரேந்திர மோடி மந்திரிகளுக்கு மிகவும் சுதந்திரம் வழங்கியிருக்கிறார். எங்களுக்கு அவர் கூறியுள்ள ஒரேமந்திரம், 'நீங்கள் முடிவுகள் எடுப்பதை பெருமையாக கருதவேண்டும். அனைவரும் சொல்வதை கவனியுங்கள், ஆனால் நாட்டுக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுங்கள்' என்பதுதான்.

மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்து ள்ளார்கள், 100 நாட்களுக்காக அல்ல. ஆனால் கடந்த அரசின் 'கொள்கை முடக்கு வாதம்' முடிவுக்குவந்து, இப்போது முடிவுகள் அனைத்து அமைச்சகங்களிலும் எடுக்கப்படுகிறது. பெட்ரோல்விலை 2 முறை குறைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள்வைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசுமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சிபாதைக்கு திரும்பியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் நிலுவையில் இருந்த 17 திட்டங்களுக்கு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கங்கையை மாசு படுத்தும் தொழிற் சாலைகளை ஆன்லைன் மூலம் கண் காணிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கறைப்படுத்த காங்கிரஸ் சதிசெய்கிறது. ஆனால் அவர்களால் மோடி அரசு மீது ஒரு விரலைகூட சுட்டிக்காட்ட முடியாது. என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...