இந்தியா மீண்டும் எழுச்சி பெற புதுமையான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்

 இந்தியா மீண்டும் எழுச்சி பெற புதுமையான யோசனைகளையும், அதுதொடர்பான முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .

டெல்லியில் அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் சார்பில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கில் வெங்கய்யநாயுடு பேசியதாவது: புதுமையான யோசனைகளையும், அது தொடர்பான முயற்சிகளையும் முன்னெடுத்துச் சென்றால் தான் இந்தியா எழுச்சிபெறும். வழக்கமாக இருக்கும் முறையை கடைப்பிடிப்பது இனிபலன்தராது. பண்டைய காலத்தில் அறிவுத்தளத்தில் இந்தியர்கள் பிறநாட்டினருக்கு முன்னோடிகளாக இருந்தனர். ஆனால், காலனியாதிக்கத்தி லிருந்து விடுபட்டபிறகு, தொழில் நுட்பத்துறையில் இந்தியாவின் மதிப்பு குறைந்தது.

உலகுக்கே வழிகாட்டிய நாம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பிறநாட்டினரை பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

நாட்டில் மனிதவள ஆற்றல் அபரிமிதமாக உள்ளது. அதை சரியானமுறையில் நாம் பயன்படுத்த வேண்டும். இப்போது இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகெங்கும் வரவேற்பு உள்ளது. 1960-களிலும், 1970-களிலும் அமெரிக்கா, ஐரோப்பியா கண்டங்களுக்குச்சென்ற நம் நாட்டினர், அங்குள்ள தொழில் நுட்பம்சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானிகள் பணி புரிகின்றனர். அதேபோன்று, கம்ப்யூட்டர், சுகாதாரம், மருந்துதயாரிப்பு, வணிக மேலாண்மை நிறுவனங்களில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

எங்களுக்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் நிதிப்பற்றாக் குறையும், வர்த்தகத் துறையில் பின்னடைவும் ஏற்பட்டது. அந்நிலையை நாங்கள் மாற்றி வருகிறோம் இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...