மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய மாற்றம்

 மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்படும் என்றும், புதிதாக 5 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
.தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் சிலஅமைச்சர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இலாக்காகளை வகித்து வருகிறார்கள். இதனால் கடந்த மே 26ம்தேதி மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றதில் இருந்து அமைச்சரவையில் மாற்றம்செய்யப்படும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே சாலைவிபத்தில் மரணம் அடைந்தார். அவர் வகித்துவந்த ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் இலாகாவுக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிதாக 5 அமைச்சர்களை நியமிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக் கூறப்படுகிறது.

மகராஷ்டிராவில் பிஜேபியை ஆதரித்து தேர்தல்பிரச்சாரம் செய்துவரும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் விஜய தசமி உரை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் பட்டதில் சர்ச்சை ஏற்பட்டு இருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர் முந்தைய ஆட்சிக் காலத்தில் தூர்தர்ஷனுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். முந்தைய ஆட்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் உரையை ஒளிபரப்ப ஏன் அனுமதிக்கவில்லை. இதர தொலைக்காட்களில் அவரது உரை ஒளிபரப்பப் பட்டது. தற்போது டிடிக்கு எந்த கட்டுப்பாட்டையும் நாங்கள் விதிக்கவில்லை. இந்த மாதம் 3-வது வாரம் அல்லது டிசம்பரில் மத்திய அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படும் .என்றார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை யொட்டி செய்யப்பட இருக்கும் இந்த மாற்றம் குறித்து மேற்கொண்டு தகவல்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

கருப்புபணம் மீட்புகுறித்து கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதல்படி கருப்புபணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களை விரைவில் பொது மக்களுடன் பகிர்ந்துகொள்வோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...