பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.
மிளகாய் 200 கிராம், மிளகு 100 கிராம் எடுத்துப் பொடித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரைலிட்டராக சுண்டக் காய்ச்சி வடித்து அதில் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரைலிட்டர் சேர்த்து பதமாய் காய்ச்சி வாரம் 1 முறை தலைமுழுகிவர எவ்வித தலைவலியும் தீரும். இது மிளகாய் தைலமாகும்.
மிளகாய் 2 எடுத்து மண் சட்டியிலிட்டு 2 துளி நெய்விட்டுக் கருக்கி புளியங்கொட்டை அளவு கற்பூரம்போட்டு 1 கைப்பிடி நெற்பொரியும் போட்டு அரைலிட்டர் தண்ணீர்விட்டு காய்ச்சி ஒவ்வொரு வாந்தி பேதியின்போது 1 முடக்கு கொடுத்துவர வாந்தி பேதி குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
3far-fetched