அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா -பிரதமர் மோடி பெருமிதம்

”உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று (ஏப்ரல் 11) பிரதமர் மோடி சென்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ரூ. 3,880 கோடி மதிப்பிலான 44 நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: காசி எனக்குச் சொந்தமானது, நான் காசியைச் சேர்ந்தவன். கடந்த 10 ஆண்டுகளில், வாரணாசியின் வளர்ச்சி புதிய வேகத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு இளைஞருக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கான உறுதிப்பாடு ஆகியவை இன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டங்களால் எளிதாக்கப்படும். அதிகாரத்தை விரும்புபவர்கள் (எதிர்க்கட்சிகள்) தங்கள் குடும்ப நலன்களை மட்டும் மேம்படுத்துகின்றன. ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகிறோம்.

இன்று, காசிக்குச் செல்பவர்கள் அனைவரும் அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பாராட்டுகிறார்கள். வயதானவர்களுக்கு சிகிச்சை இலவசம் என்பது எனது உத்தரவாதம். இன்று, டில்லி மற்றும் மும்பையின் பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்துள்ளன. இதுதான் வளர்ச்சி.

உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், நாட்டின் கால்நடை வளர்ப்பு சகோதரர்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ� ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...