அமுக்கிரா கிழங்கு

 இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் பெருக்கும், கிழங்கை உண்டால் உடலை உரமாகச் செய்து காமத்தை உண்டாக்கும். இதை அரைத்துக் கட்டிகளின் மேல் போட கட்டிகள் கரையும். உறக்கம் உண்டாக்கும், தாது வெப்பத்தைப் போக்கும் தீபனம் (பசி) உண்டாக்கும்.

 

அமுக்கிரா கிழங்கைப் பச்சையாகக் கொண்டு வந்து பசுவின் நீர் விட்டு அரைத்து, கொதிக்க வைத்து கிரந்தி, கண்டமாலை, வாதவீக்கம், இடுப்பு வலி மீது பற்றுப் போடக் குணமாகும்.

சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்துக் கட்டிகளின் மேல் போடக் கட்டி கரையும்.

சூரணம்

கிழங்கைப் பாலில் ஊறவைத்து வேகவைத்து அலம்பி, உலர்த்தி, சூரணம் செய்து ஒரு வேளைக்கு 5 கிராம் முதல் 10 கிராம் வரை தேனில் கலந்து கொடுக்க, கபம், வாதம் இவற்றால் உண்டாகும் நோய்கள் விலகும். வாதசூலை, வீக்கம், பசிமந்தம் போகும். நெய்யுடன் கலந்து உண்டு வர ஆயாசம் நீங்கும். உடல் பலம் உண்டாக்கும். சுக்கிலம் பெருக்கும்.

அமுக்கிராக்கிழங்கு சூரணத்தை 1 பங்குடன் 3 பங்கு கற்கண்டு சர்க்கரை சேர்த்து வேளைக்கு 5 கிராம் முதல் 10 கிராம் வரை, காலை, மாலை உண்டு,பசும்பால் குடித்து வர, சுக்கிலநட்டம், நரம்புத் தளர்ச்சி இவை நீங்கி உடல் வலிவும், வசீகரமும் உண்டாகும்.

அசுவகந்தியைக் கொண்டு, சூரணம், லேகியம், தைலம், முறைப்படி செய்து உபயோகித்தால் உடலுக்கு நல்ல பலன் உண்டாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...