பிரிக்ஸ் மாநாட்டுக்காக அடுத்தவாரம் ரஷ்யா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சு வார்த்தையின் போது ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கிவருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ரஷ்யாவின் உஃபா நகரில் வரும் 9ந் தேதியன்று பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு ஆகியவை நடைபெற உள்ளது. இவற்றில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
இதில் கலந்துகொள்ள வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இச்சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத இயக்கத்தின் கை ஓங்கிவருவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ். இயக்கம், ஆப்கானில் 4 ஆயிரம்பேரை தங்களது இயக்கத்தில் இணைத்திருக்கிறது. இது இந்தியா ,பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் பேராபத்தாக இருக்கும் என்பதால் இருநாடுகளும் இந்த அபாயத்தை முறியடிப்பது பற்றி ஆலோசிக்க உள்ளன.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.