மத்திய அரசின் வெற்றிகளால் காங்கிரஸ்கட்சி நிலை குலைந்துள்ளது

 பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் வெற்றிகளால் காங்கிரஸ்கட்சி நிலை குலைந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

எதிர்க் கட்சிகளுடன் இணைந்து செயல்பட அரசு விரும்பு வதாகவும், அதற்காக அக்கட்சிகளின் அர்த்தமற்ற கோரிக்கைகளை ஏற்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செüஹான் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

பாஜக.,வின் இளைஞரணியான, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

சுஷ்மா ஸ்வராஜ் இந்ததேசத்தின் மிகப்பெரிய சொத்து. அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனாலும், அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதே வேளையில், வசுந்தராவும், செüஹானும் மிகச்சிறப்பாகச் செயல்படுபவர்கள். முந்தைய ஆட்சியின்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் 6 பேர் பதவி விலகநேரிட்டதை மனதில் வைத்துக் கொண்டு, இதுபோன்ற அர்த்தமற்ற வாதங்களை காங்கிரஸ் முன்வைக்கிறது.

ஆனால், அந்த அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. கடவுளின்வரம் மோடி: இந்த தேசத்துக்கு கடவுள் தந்த வரம்தான் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தலைமையில், வங்கதேச – இந்தியநில எல்லை ஒப்பந்தம், நாகாலாந்து அமைதி ஒப்பந்தம், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்து யுரேனியஇறக்குமதி உள்ளிட்ட வெற்றிகளை தேசம் அடைந்துள்ளது.

மோடி அரசின் வெற்றியால் காங்கிரஸ் கட்சி நிலை குலைந்து போயுள்ளது. இதனால் தான், நாடாளுமன்ற அலுவல்களை முடக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க முயல் கின்றனர்.
பொறுமையிழக்கும் மக்கள்: நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவேண்டும். வெள்ள பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெறவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால், இதெல்லாம் நடை பெறாததால் அவர்கள் பொறுமை இழந்துள்ளனர் என்றார் வெங்கய்ய நாயுடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...