மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மூன்றுபேர் கொண்ட பாஜக குழு

 தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றுபேர் கொண்ட பாஜக குழுவினர் பார்வையிட உள்ளதாக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

 சென்னை, திருவொற்றியூர், கார்கில்நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியா ளர்களிடம் அவர் கூறியது:

 கார்கில் நகரில் பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றபடாததால் மழை நீர் சூழ்ந்து மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். பொதுஇடங்களை ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி யிருப்பது போதுமானதாக இல்லை. பாதிப்புகளை நேரடியாக ஆய்வுசெய்து, இழப்பீடுகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணம்தொடர்பாக, மத்திய அரசிடம் உதவி கோரினால் கட்டாயமாக செய்து கொடுக்கத்தயாராக உள்ளது.

 தமிழகத்தில் மழையால் பாதிக்கபட்ட இடங்களை ஆய்வுசெய்ய மூன்றுபேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பொன். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கோபால சின்னையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வெள்ளம்பாதித்த பகுதிகளை வரும் சனிக் கிழமை (நவ. 21) ஆய்வு செய்ய உள்ளனர் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.