மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாம்

கைத்தொலைபேசி, லெப்ரொப் தேவைகளுக்கு மின்சக்தி தேவைப்படுகிறதா? இனிமேல் அதைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். அவற்றிற்கு தேவைப்படும் மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாமென கனடாவிலுள்ள Simon Praser பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Nax Donelen என்பவரும் அவருடைய சகாக்களும் கண்டுபிடித்துள்ளனர்.

5வாட்ஸ் மின்சக்தியைப்பெற கால்களில் இரண்டு இடுக்கிளை

(Brece)பொருத்த வேண்டியுள்ளது. இதற்கு நீங்கள் சம்மதம் என்றால், மேற்கொண்டு விபரங்களைப்படியுங்கள்.

இரண்டு கால்களில் பொருத்தப்படும் இடுக்கிகள் தற்சமயம் 1.6 கிலோ எடையுள்ளதாகும்.இவ்விடுக்கிகள் முழங்காலுக்கு மேற்புறத்தையும், கீழ்புறத்தையும் இணைக்கும் ஒருவகைப் பிடிப்பு. கால்கள் நடக்க நடக்க உந்தப்படும் விசையினால் இவ்வகைமின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் 7 வாட்ஸ் மின்சக்தி உங்கள் முதுகுப் புறத்தில் தொங்க விடப்படும் ஒருவித பையிலான உறைக்குள் சேகரிக்கப்படும். இதன் எடை கிட்டத்தட்ட 38கிலோ எடையாக இருக்கக்கூடுமென

ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டால், இதன் எடை குறைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கால்களில் பொருத்தப்படும் இடுக்கிகள், இருப்பது போன்ற பிரமையை இல்லா தொழித்தலே மேற்கொண்டு ஆராயப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதலில் இராணுவத்தினர் அவசர உதவியாளர்கள் பாவிக்கக் கூடிய வகையில், இவ்விடுக்கிகள் தயார் செய்யப்படுமென்றும், அதன் அனுபவத்தை அனுமானித்து மேற்கொண்டு முன்னேற்றம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சுமக்க முடியாத சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு அன்றாடம் ஊசலாடும் மக்களுக்கு இதுவேறு சுமையா என்று முணுமுணுப்பது காதில் கேட்கிறது. தினமும் நடக்கத்தான் செய்கிறீர்கள், சும்மா வரும் ஒரு சேகரிப்பை, காலில் பொருத்திக்கொண்டும், முதுகில் சுமந்துக்கொண்டும் போவதில் குறையேதும் இல்லையே.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...