பிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கேரளாவில் இருந்து தனிவிமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை வரும் பிரதமர் சிங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ. மருத்துவ கல்லூரியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, கொடிசியா மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரி சவுத்ரி தலைமையில் 4 அதிகாரிகள் நேற்று கோவைவந்தனர். அவர்கள் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தனர்.

பொதுக்கூட்ட மைதானம் நேற்று முதலே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு ‘சீல்’ வைக்கப் பட்டது. அங்கு செல்ல யாரையும் அனுமதிக்க வில்லை. இதுபோல, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. கோவை, சேலம், திருப்பூர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த பகுதிகளில் பாதுகாப்புபணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் தனிபாதுகாப்பு அதிகாரிகள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்து கின்றனர்.

இதில் திறப்புவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் பிரதமர் வந்துசெல்லும் இடங்களில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...