திருமணத்திற்கு பிந்தைய பலாத்காரம் தடுக்க முடியாது

திருமணத்திற்கு பிறகு மனைவியை பலாத்காரம்செய்வதை தடுக்க முடியாது,என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான திருமணத்திற்கு பிறகான குடும்ப வன்முறை மற்றும் திருமணத்திற்கான பிறகான பலாத் காரத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது கேள்வி எழுப்ப பட்டது.

 

இது குறித்து  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி ராஜ்ய சபாவில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், திருமணத்திற்கு பிறகான மனைவி மீதான பலாத்காரம் என்பதை சர்வதேச கண்ணோ ட்டத்தில் புரிந்துகொள்ளலாம்.

என்றாலும் அதை இந்தியாவில் நடைமுறைப் படுத்த முடியாது.

இந்தியாவை பொறுத்தளவில், கல்வி யின்மை, வறுமை, சமூக பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள், மனோபாவம் போன்ற பல்வேறு காரணங்களால் திருமணத்திற்கு பிறகு மனைவிமீதான பலாத்காரத்தை தடுக்க முடியாது.இதுபோன்ற தடைகள் இந்திய கலாச்சாரத்திற்கு ஒத்துவராத ஒன்று என்றார்.

அதேபோல் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், பெண்கள் மீதான குடும்பவன்முறை மற்றும் பொது இடங்களில் வன்முறையை தடுப்பதற்கு உதவும்வகையில் ஒரேமாதிரியான அவசரகால தொலைபேசி அழைப்பு எண் அமைக்கப்படுமா என்று கேட்கப்பட்டது.

33 மாநிலங்களிலும் இதுபோன்ற பெண்களின் உதவிக்கு அவசர தொலைபேசி அழைப்புகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.