மத்திய அரசின் ‘உதய்’ மின் திட் டத்தில் தமிழகஅரசு இணையவில்லை

மத்திய அரசின் ‘உதய்’ மின் திட் டத்தில் தமிழகஅரசு இணையவில்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல்பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று கோவை வந்தார்.

முன்னதாக, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சிசெய்த திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் ஊழல் கட்சிகளாகவே உள்ளன. இவ்விரு கட்சிகளும் தமிழகத்துக்கு நல்லாட்சியை தரத் தவறி விட்டன.

அதேசமயம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழலற்ற நல்லாட்சியை வழங்கிவருவதால், பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. தேர்தல்பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு சிறப்பாக செயல் படுகிறது. மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, சிறைபிடித்தல் சம்பவங்கள் குறைந்துள்ளன.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க, மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் ‘உதய்’ மின்திட்டத்தில் 20 மாநிலங்கள் தங்களை இணைத்துக் கொண்டு பலனடைந்துள்ளன. ஆனால், தமிழக அரசு இணையாததால், தமிழகமக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...