பணத்தை பார்க்காமல் வேட்பாளரின் குணத்துக்கு வாக்களி யுங்கள்

பணத்தை பார்க்காமல் வேட்பாளரின் குணத்துக்கு வாக்களி யுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக. வேட்பாளர்களை ஆதரித்து இல.கணேசன் பிரசாரம் செய்த போது, ''வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை திரு மங்கலம் ஃபார்முலா என்பார்கள். இப்போது அது, தமிழக ஃபார்முலாவாகி விட்டது. தோல்வி ஏற்படும் என்று தெரிந்தபிறகுதான், தேர்தலில் போட்டியில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். இது, அவர் ஏற்கெனவே திட்டமிட்டு எடுத்தமுடிவு.

தமிழகம் முழுவதும் தற்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுவரும் பண மூட்டைகள் எந்தக் கட்சியினுடையது, அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன, தொடுத்தவழக்கு என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும்.

ராமர் பாலத்தை இடிக்காமல் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக. அரசுதான் கூறியது. இத்திட்டத்தை நிறைவேற்ற 4-வது வழித் தடம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் மத்திய அமைச்சராக இருந்த திமுக.வின் டி.ஆர்.பாலு, ராமர்பாலம் என்ற ஒன்றில்லை எனக் கூறி, இத்திட்டத்தை 6-வது வழித்தடத்தில் நிறைவேற்றுவோம் என்றார். மேலும், கருத்துக்கேட்புக் கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்தினார். அப்போது, அதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக. தனது தேர்தல் அறிக்கையில், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறியிருப்பது, அத்திட்டத்தின் மூலம் லாபம் சம்பாதிப் பதற்காகவே. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ராமர்பாலத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்படும் எனத்தெரிவித்துள்ளது. அதனால், பணத்தை பார்க்காமல் வேட்பாளரின் குணத்தை பார்த்தும், தேசப்பற்று மிக்கவர்களுக்கும் வாக்களியுங்கள்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...