ஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை

திண்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நான்குபேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை வழங்கி நீதிபதி அசோகன் உத்தர விட்டார்.

திண்டுக்கல் அருகே மாசிலாமணி புரத்தில் வசித்து வந்தவர் ஆர்எஸ்எஸ் இயக்க மாவட்டஅமைப்பாளர் பாஸ்கரன் (32). 2008 டிசம்பர் 21-ம் தேதி பாஸ்கரனை அவரதுவீட்டருகே சிலர் வெட்டிக்கொல்ல முயன்றனர். இதில் பாஸ்கரனின் கால் துண்டானது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை  இலியாஸ், ரஹமத்துல்லா,  ரியாஸ்,  சையது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் நீதிபதி அசோகன் முன்னிலையில் நடை பெற்றுவந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் ஜூன் 27-ம் தேதி முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு 5 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை விதித்து நீதிபதி அசோகன் உத்தர விட்டார்.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...