தூய்மை இந்தியா; 100 இடங்களை தேர்வு செய்து சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்க உள்ளோம்

மதுரை மீனாட்சி யம்மன் கோயில், தாஜ்மஹால் உட்பட 10 முக்கிய இடங்களில் தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு பொறுப் பேற்றுள்ள மத்திய குடிநீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து அத்துறையின் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, நாட்டில் உள்ள 100 இடங்களை தேர்வு செய்து சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்க உள்ளோம்.. புனிதஸ்தலங்கள் அல்லது சுற்றுலாத் தளங்களாக இவை இருக்கலாம். முதல் கட்டமாக, 10 முக்கிய இடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோயில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாஜ்மஹால் மற்றும் மணிகர்ணிகா படித்துறை, ஆந்திராவில் திருப்பதி, பஞ்சாபில் பொற்கோயில், ராஜஸ்தானில் அஜ்மீர்தர்கா, ஒடிசாவில் ஜெகந்நாதர் கோயில், மஹாராஷ்டிராவில் சத்ரபதிசிவாஜி ரயில் நிலையம், அசாமில் காமாக்யா கோயில், தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய 10 இடங்களில் தூய்மைப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இந்த 10 இடங்களில் பணிகள் முடிந்தவுடன், மீதமுள்ள 90 இடங்களிலும் அதே போன்ற தூய்மைப் பணிகள் தொடரும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...