இரண்டு ஆண்டுகளில் அன்னிய நேரடிமுதலீடு, 53 சதவீதம் அதிகரித்துள்ளது

நாட்டில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளை, தொடர்ந்து மேற்கொண்டதன் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளில், அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்ட நேரடிமுதலீடு, 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஒரு புதிய சாதனையாகும்.
 

2015-16 நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு குவிந்ததற்கு, மறு சீரமைப்பு நடவடிக்கைகள் முக்கியகாரணமாக அமைந்துள்ளது.  விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், விலைவாசி கட்டுப்பாடு, பட்ஜெட்டுக்கு உட்பட்ட செலவினங்கள், நுண்பொருளாதார ஸ்திரத்தன்மை போன்றவை முதலீட்டுக்கான சூழலை உருவாக்கி யுள்ளன.  முதலீட்டாளர்கள் ஒன்றும் அறக்கட்டளையில் முதலீடு செய்ய வில்லை. அப்படியிருந்தால் லாபத்தை ஈட்டமுடியாது.

யாரும் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். பலன் இருப்பதால்தான் முதலீடு அதிகரித்துள்ளது. தொழில் தொடங்குவதில் எளியநடைமுறையை ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலைவாசியை கட்டுப்படுத்தி, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டதன் மூலம், இது சாத்தியமாகியுள்ளது. நிதிச்செலவினங்கள் குறைக்கப்பட்டு, ஸ்திரமான பொருளாதார சூழல் உருவாக்கப் பட்டது. இது, முதலீடுகளுக்கு பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்திதந்துள்ளது.

கடந்த, 1991ல், தாராளமய மாக்கல் கொள்கை அமலுக்கு வந்ததுமுதல், பல துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அவற்றுடன் மேலும் பலதுறைகளில், அன்னிய நேரடி முதலீடுகளுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு துறைகளில், அன்னியநேரடி முதலீடு சார்ந்த கடுமையான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும், சுலபமாக தொழில் துவங்குவதற்கு வசதியாக, தொழில் உரிமம், மின்இணைப்பு உள்ளிட்டவற்றை, விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அனைத்து நடை முறைகளும், வெளிப்படையான செயல் பாடுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளன.

நாட்டின் பொருளாதாரம் நிலையாக, நீடித்தவளர்ச்சி காண வேண்டும் என்ற கொள்கையுடன், அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், உலகளவில் மிகவேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் ஒன்றாக, இந்தியா உயர்ந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதில்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...