சமூக பிரச்சினைகளுக்கு அரசியல்சாயம் பூசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்

பாஜக. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களிடம் நான்சொல்வது, நீங்கள் ஒரு சமுதாயத்தினருக்கு எதிராகபேசினால் நாட்டிற்கு பதில்சொல்ல வேண்டும்.

தலித்கள், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமுடையவன் நான். முந்தைய அரசைவிட தலித்கள் மீதான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளது. 10 அரசு மற்றும் 10 தனியார் பல்கலை கழகங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் விதிமுறையில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளது. அந்த பல்கலைக் கழகங்களை உலகத் தரத்திற்கு உருவாக்க திட்டமிட்டுள்ளது அரசு.

வெளிநாடுகளில் கருப்புபணம் பதுக்கி வைப்பதற்கு எதிராக நம்மிடம் மிகவும் வலிமையான சட்டங்கள் உள்ளன. சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கையை எளிமை யாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படும். சீர்திருத்தம், செயல்பாடு, வெளிப்படைத்தன்மை ஆகியவையே எனது அரசின் தாரக மந்திரம்.

நான் ஒருமாநிலத்தின் முதல்–மந்திரியாக 14 ஆண்டுகள் இருந்துள்ளேன். அரசியல் காரணங்களுக்காக, நான் எந்தகோப்புகளையும் கையாண்டது இல்லை. அத்தகைய குற்றச்சாட்டு என் மீது எழுந்தது இல்லை. இதற்கு வரலாறு சாட்சியாகஉள்ளது.

மத்திய அரசில் இரண்டரை ஆண்டுகளாக இருக்கிறேன். எந்தமாநிலத்திலும் யாருக்கு எதிரான கோப்புகளையும் மீண்டும் திறக்குமாறு எனது அரசு உத்தரவிட்டது இல்லை.எந்த அரசியல் கட்சிக்கோ, அரசியல் பரம்பரைக்கோ எதிராக எனது அரசு உத்தரவிட வில்லை.

எனவே, எந்த பரம்பரையையும் தப்பவிடாமல் பழிவாங்குகிறோம் என்று கூறுவது சரியல்ல. அதுபோல், எந்த விவகாரத்தையும் மூடிமறைக்க சொல்வதற்கும் எனக்கு உரிமை இல்லை. சட்டம் தனது கடமையை செய்யும்.

என் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்கள். சாதியின் பெயரால் நாட்டை விஷமாக்கி விட்டவர்கள், சமூக பிரச்சினைகளுக்கு அரசியல்சாயம் பூசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  

வளர்ச்சி ஒன்றே நமது செயல் திட்டமாக இருக்க வேண்டும். வறுமையில் இருந்து நாடு விடுபட வேண்டுமென்றால், வளர்ச்சி அவசியம். அதற்கு ஏழைகளுக்கு நாம் அதிகாரம் அளிக்கவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி .

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.