ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான செயல் திட்டம்

பிரச்னைகள் சூழ்ந்துள்ள ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களானது வளர்ச்சியையும், நம்பிக்கையையுமே அஸ்திவாரமாக கொண்டுள்ளன என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.


ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பர்ஹான் வானியின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.


சுமார் மூன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த கிளர்ச்சியில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழலை ஏற்படுத்தும்நோக்கில், அந்த மாநிலத்தின் ஊராட்சித் தலைவர்களுடன் நரேந்திரமோடி சனிக்கிழமை உரையாற்றினார்.


இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரின் 4,000 கிராம ஊராட்சி தலைவர்களின் பிரதிநிதிகளை கொண்ட உயர் நிலைக் குழுவினருடன் மோடி கலந்துரையாடினார். அப்போது, ஜம்முகாஷ்மீரில் நிலவிவரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகவேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.


ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே தனது பிரதான செயல் திட்டம் எனக்கூறிய மோடி, வளர்ச்சி மட்டுமே மாநில பிரச்னைகளுக்கு சிறந்தத்தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.மேலும், ஜம்மு-காஷ்மீர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களானது, வளர்ச்சியையும் – நம்பிக்கையையுமே அஸ்தி வாரங்களாகக் கொண்டுள்ளது .


ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் எரிக்கப்பட்டதற்கு மோடி கடும்கண்டனம் தெரிவித்தார். முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கிவரும் நிதியுதவிகள், கிராமங்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெறுவதில்லை என்று பிரதமரிடம் உயர்நிலைக் குழுவினர் புகார் தெரிவித்தனர்.
மேலும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண, மாநிலத்தின் கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரம்வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74-ஆவது சட்டப் பிரிவுகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...